districts

img

சிபிஎஸ்இ தெற்கு மண்டலம்-1 ஹாக்கி போட்டி துவக்கம்

மேட்டுப்பாளையம், செப்.22- சிபிஎஸ்இ தெற்கு மண்ட லம்-1 அளவிலான ஹாக்கி  போட்டி மேட்டுப்பாளை யத்தில் ஞாயிறன்று துவங்கி யது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் அமைந் துள்ள சச்சிதானந்த ஜோதி  நிகேதன் பன்னாட்டுப் பள்ளி யில், சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்-1 அளவி லான ஹாக்கி போட்டிகள் ஞாயிறன்று துவங் கியது. செப்.26 ஆம் தேதி வரை  நடைபெறும் இப்போட்டியில், தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும், யூனி யன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றிலிருந்தும் 56  பள்ளிகளைச் சேர்ந்த, மாணவர் பிரிவில் 68  அணியினரும், மாணவியர் பிரிவில் 35 அணி யினர் என மொத்தம் 1,854 மாணவ, மாணவி கள் கலந்துகொள்ள உள்ளனர். 14, 17 மற்றும்  19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் நாக்கவுட்  மற்றும் லீக் சுற்றுகள் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டியில் பங் கேற்கும் இரு அணிகளும், தேசிய அளவில்  நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளும். இதன் துவக்க விழாவில், பள்ளியின் உடற்கல்வித்துறை துணை  இயக்குநர் டி.பி.அனிதா, நிர்வாக அறங்காவ லர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வெ.கணேசன், முதல்வர்  ரா.உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சு.சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.