districts

img

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி: இரு பிரிவுகளில் பெம் பள்ளி வெற்றி

திருப்பூர், நவ.20 - சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டியில் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி இரு பிரிவுக ளில் முதலிடம் பிடித்தது. திருப்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட சகா தேயா காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் செவ்வாய்கிழமையன்று பூமலூர் சிவா நிகே தன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியானது ஜூனியர் பிரிவு 14 வயதுக்கு  உட்பட்டோர், சீனியர் பிரிவு 16 வயதுக்கு உட் பட்டோர், சூப்பர் சீனியர் பிரிவு 19 வயதுக்கு  உட்பட்டோர் என மூன்று பிரிவாக நடைபெற் றது.இப்போட்டியில் திருப்பூர் பகுதியில்  உள்ள 23 சிபிஎஸ்சி பள்ளிகள் கலந்து கொண் டன.  இறுதிப் போட்டியில் சூப்பர் சீனியர் பிரி வில் பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளி யும், சிவா நிகேதன் பள்ளியும் விளையாடி னர். இதில் பெம் ஸ்கூல் ஆப் பள்ளி மாணவி கள் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்ற னர். சீனியர் பிரிவில் 16 வயதுக்கு உட்பட் டோருக்கு உண்டான இறுதிப் போட்டியில் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளி மாண விகளும், ஸ்பிரிங் மெளண்ட் பள்ளி மாண விகளும் விளையாடினர்.  இதில் இறுதியாக பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ் லென்ஸ் பள்ளி மாணவிகள் முதல் இடத்தை  பெற்று கோப்பையை வென்றனர். ஜூனியர்  பிரிவான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இறுதிப் போட்டியில் சிவா நிகே தன் பள்ளியும், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி யின் மாணவிகளும் விளையாடினார்கள். இதில் சிவா நிகேதன் பள்ளி மாணவிகள் முதல்  இடத்தை பெற்றுக் கோப்பையை வென்றனர்.  இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று  பிரிவு மாணவிகளுக்கும் வெற்றிக் கோப்பை யும், இரண்டாம் இடம் பிடித்த மாணவிக ளுக்கு உண்டான வெற்றி கோப்பை, பதக்கம்  மற்றும் சான்றிதழ்களை சிவா நிகேதன் பள்ளி யின் இயக்குனர்கள் அமிர்தா, பிருந்தா, பள்ளி  முதல்வர் கங்கா, ஒருங்கிணைப்பாளர் பிரண வியா ஆகியோர் வழங்கி வெற்றி பெற்ற மாண விகளையும், நடுவராக செயல்பட்டவர்களை யும் வாழ்த்தி பேசினார்கள்.