districts

img

காவிரியில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு

நாமக்கல், ஜூலை 31- குமாரபாளையம் காவிரி ஆற் றில் வெள்ளப்பெருக்கின் காரண மாகவும்,  பாலம் பழுதின் காரண மாகவும் போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்  தொடரும் கனமழை காரணமாக,  கர் நாடகா மாநிலத்திலுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள்  நிரம்பியதால் .அதிலி ருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் நோக்கி வந்து கொண்டுள் ளது. இதனால் மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவு 120 அடியை எட்டியதை அடுத்து கர்நா டகாவில் இருந்து வரும் உபரி நீர் கள் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சுமார் ஒரு  லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண் ணீர் தற்பொழுது காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக குமாரபா ளையம் பகுதியில் உள்ள காவிரி கரை பகுதிகளான கலைமகள் வீதி, இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 103 குடும்பத் தினர் மீட்கப்பட்டு, தற்பொழுது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக் கும் வகையில் பாலக்கரை பகுதி யில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதின் காரணமாக பொதுமக்க ளின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் பகுதிகள் தற்பொழுது 3 பாதைகளில் ஒரு பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.