districts

img

சாலைகளில் உலாவும் கால்நடைகள்

உதகை, டிச.9- உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்ற னர். இதன் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் நகரில் உள்ள  அனைத்து சாலைகளிலும் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும். இந்நிலை யில், உதகை நகரில் சுற்றுலா பயணிகள் மற் றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர் வாகம், உதகை நகருக்குள் கால்நடைகளை விடக்கூடாது என எச்சரித்தது. இருப்பினும்,  உதகையில் கால்நடைகள் மற்றும் குதிரை கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப் பாக, ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை யில் இருந்து மருத்துவமனை செல்லும் சாலையில் எப்போதும் குதிரைகள் கூட்ட மாக காணப்படுகின்றன. இதனால் இவ்வழித் தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படு வது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குதிரைகள் ஒன்று டன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு வாக னங்கள் மீது மோதுவதால் அடிக்கடி விபத் தும் ஏற்பட்டு வருகிறது. எனவே, உதகை நக ரில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வும், அவை நகருக்குள் வராமல் தடுக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் வலியுறுத்தி உள்ளனர்.