திருப்பூர், ஜூன் 7- மருத்துவப் பயிராக உள்ள கண்வலி விதையை அங்கீகரிக்கப் பட்ட பயிராக அறிவிப்பதன் மூலம் வங்கி கடன், பயிர்க் காப்பீடு பெற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு செங்காந்தள் விதை விவ சாயிகள் சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு செங்காந்தள் விதை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப் பாளர் பழ.ரகுபதி திங்களன்று அளித்த செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, தமிழகத்தில் திண்டுக்கல், திருப் பூர், கரூர் உள்பட பல மாவட்டங் களில் பத்தாயிரம் ஏக்கர் அளவில் கண்வலி விதை பயிரிடப்படுகிறது. இதில் விவசாயிகள் சீரான விலை இன்றி இடைத்தரகர்களால் தொடர்ந்து ஏமாறும் நிலை நீடித்து வருகிறது.
ஆகவே, கண்வலி விதைக்கு நிரந்தர விலை நிர்ண யம் தேவை என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகிறார் கள். திருப்பூர் மாவட்டம் மூலனூ ரில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் கணேசமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட் டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற் றது. இதில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பொள்ளாச்சி சண்முக சுந்தரம், திண்டுக்கல் வேலுசாமி, சேலம் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்வலி விதை விவசாயத்தை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறி வித்து, வங்கிகள் மூலம் பொரு ளீட்டுக் கடன், பயிர் காப்பீடு ஏற்பாடு செய்ய வேண்டும். கண்வலி விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2ஆயிரத்து ஐநூறு ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் விவசாய பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலர்கள், நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி, அதில் உற்பத்தி மற்றும் செலவினங் களை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, ஆண்டு முழுவதும் ஒரே விலையில் கொள்முதல் செய்ய ஏற் பாடு செய்யப்பட வேண்டும். தேவை யான நிதியை ஒதுக்கி ஒன்றிய அர சும் மாநில அரசும் கண்வலி விதையை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளிடம் உள்ள கண்வலி விதையை அரசே இருப்பு வைத்துக் கொள்ளவும், இரண்டாண்டு காலத்துக்கு வட்டி இல்லா கடன் கொடுக்கவும், அதற்கு மேல் குறைந்த வட்டியில் வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதுடன் இதற்கு ரூ.200 கோடி நிதியை கூட்டுறவு துறைக்கு ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.