தருமபுரி, நவ.23- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங் கள் வெறிச்சோடி காணப்பட்டன. வளர்ச்சித் துறையில் திணிக்கப் படும் பணி நெருக்கடிகள், காலங் கடந்த ஆய்வுகள், விடுமுறை தின இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்அப், காணொளி ஆய்வுகள் அனைத்தை யும் முற்றாக கைவிடவேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக் கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குநர்கள் அனைவருக்கும் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இளநிலை உதவி யாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும். வளர்ச்சித் துறை யில் காலியாக உள்ள ஊராட்சி ஒன் றியப் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் உடனே நிரப்பவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் நவ-23,24 ஆகிய இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் 251 கிராம ஊராட்சிகள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பணிபு ரிந்து வருகின்றனர். இப்போராட் டதால் மாவட்ட முழுவதும் அலுவல கங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சேலம் இதேபோல் மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சேலத்திலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட் டதால் அலுவலகங்கள் வெறிச் சோடியது. முதல் நாள் சேலத்தில் 620க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.