districts

img

சாதிவெறி பிடித்த பாஜக அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆவேசம்

கோவை, ஏப்.4- பழங்குடியினத்தைச்  சேர்ந்தவர் என்றே ஒரே  காரணத்திற்காக ஜனாதிபதி அவமதிக்கப்ப டுகிறார். இதுதான் பாஜகவின் உண்மை முகம், இம்முகத்தை கிழித்தெறிய இந்தியா  கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என  அந்தியூர் செல்வராஜ் எம்பி., தெரிவித்தார். கோவை மாவட்டம், வடகோவை பகுதி யில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலு வலகத்தில் ஆதிதிராவிடர் நல குழு நடத் தும் இளைஞர்கள், இளம் பெண்கள் தேர்தல்  பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் கழக மாநில துணை  பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்  எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.  அப்போது அவர் பேசுகையில்;- பாஜக  மதவாத, ஜாதிவெறி பிடித்த கட்சி். பேருக்குத் தான் ஜனாதிபதி. இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு மரி யாதை கிடைப்பது இல்லை. முன்னாள் ஜனா திபதி ராம்நாத்கோவிந்துக்கும் மரியாதை தராவதர்கள் தான் பாஜகவினர். அதுமட்டு மின்றி, ஜனாதிபதி கோவிலுக்கு வந்து சென்ற வுடன், கோவிலில், தண்ணீர் விட்டு கழுவி னார்கள் அது தான் பாஜகவின் உண்மை முகம். எனவே, பாஜகவின் இது போன்ற கோர  முகத்தை கிழித்தெறிய, இந்தியா கூட்டணி யின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மாரை வெற்றி பெற செய்ய முழுமையாக பா டுபட வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், ஆதிதிராவிடர் நலக்குழு திப்பம்பட்டி ஆறுச் சாமி, ஆதி திராவிடர் நலக்குழு அணி தலை வர் ஜார்ஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.