சாதி-‘பாகுபாட்டிற்கும் வன்முறைக்கும் வழிவகுக்கிறது’
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள நெக மத்தில் அருள்மிகு வரதராஜப் பெரு மாள் மற்றும் சென்றாயப் பெருமாள் கோவில்கள் உள்ளன.
இந்த கோவி லுக்கு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த வர்களை அறங்காவலர்களாக நிய மிக்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கர வர்த்தி, “சாதி சமூகத்தைப் பிரிக்கிறது; பாகுபாட்டிற்கும் வன்முறைக்கும் வழி வகுக்கிறது; வளர்ச்சிக்கு எதிராகவும் உள்ளது” என்பதை அழுத்தம் திருத்த மாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி மேலும் கூறுகையில், “நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டு கள் ஆன போதும்கூட, சமூகத்தின் சில பிரிவுகள் இந்த தேவையற்ற (சாதி) “சுமைகளை” இன்னும் கைவிட வில்லை. இதனால் அரசியலமைப்பு திட்டத்தின் செயல்பாடே விரக்தியடைந் துள்ளது. சாதி அமைப்பு சமூகத்தின் குறிக்கோள்களை திரிபுபடுத்தவே வழி வகுக்கிறது. சாதியை நிலைநிறுத்தும் எந்த வொரு கோரிக்கையும் அரசியல மைப்பிற்கு விரோதமானது மட்டுமல்ல; நாட்டின் பொதுக் கொள்கைக்கும் எதிரானது. சாதி ஒரு சமூகத் தீமை. சாதியற்ற சமூகம் என்பதுதான் நமது அரசியலமைப்பின் நோக்கம்.
சாதியை நிலைநிறுத்துவதற்கான எதையும், எந்த நீதிமன்றமும் ஒருபோதும் பரி சீலிக்காது. பரிசீலிக்கவும் முடியாது. ஒருவர் வாழ்க்கையில் என்ன கற்றுக் கொள்கிறார் அல்லது செய்கிறார் என்பதைப் பொறுத்து சாதி தீர்மானிக்கப் படுவதில்லை. அது பிறப்பால் தீர்மா னிக்கப்படுகிறது. சாதி - அனைத்து மனிதர்களும் சமமாகப் பிறக்கிறார்கள் என்ற சமூகத்தின் அடிப்படை நெறிமுறை களை இது தகர்க்கிறது. சாதி சமூகத் தைப் பிரிக்கிறது; பாகுபாட்டிற்கும் வன் முறைக்கும் வழிவகுக்கிறது; வளர்ச்சிக்கு எதிராகவும் உள்ளது” என்றார்.