districts

img

மங்கலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.42 ஆயிரம் ரொக்கப் பரிசு

திருப்பூர், ஆக. 19 - திருப்பூர் அருகே மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 ஆம் கல்வி  ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு  பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங் களை பிடித்த மாணவிகளுக்கு ரூபாய்  42 ஆயிரத்து 219 ரொக்க பரிசு வழங்கப் பட்டது.  இந்திய நாட்டின் 78வது சுதந்திர திரு நாளை முன்னிட்டு மங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வியாழன் அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில் அரசு பொதுத் தேர் வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.  இதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 484 மதிப்பெண்களுடன் முத லிடம் பெற்ற ஐ.பெனாசீருக்கு ரூ.5,555  வழங்கப்பட்டது. அதேபோல், 461 மதிப் பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்த  எஸ்.ரமலான் பாத்திமாவுக்கு ரூ. 3,333,  அடுத்து 457 மதிப்பெண்களுடன் மூன் றாம் இடம் பிடித்த வி.சுவாதிகாவுக்கு ரூ.2,222 வழங்கப்பட்டது.  பதினோராம் வகுப்பு (பிளஸ் 1)  பொதுத் தேர்வில் 582 மதிப்பெண்களு டன் முதலிடம் பெற்ற ஏ.கிஷ்வர் ஜஹான்  ரூ.4,444யும், இவருக்கு அடுத்து 534 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்த கே.ஆபிலா பானு மற்றும் 532  மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம்  பிடித்த ஏ.சகாரா ரமலான் ஆகியோ ருக்கு தலா ரூ.2,222 வீதம் வழங்கப்பட் டது. பன்னிரணடாம் வகுப்பு (பிளஸ் டூ)  பொதுத் தேர்வில் 575 மதிப்பெண்கள்  பெற்று முதலிடம் பிடித்த ஜே.பர்ஹானா வுக்கு ரூ.11,111 வழங்கப்பட்டது. 570  மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்த ஈ.அனுசுயாவுக்கு ரூ.6,666யும், 544 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம்  பிடித்த ஏ.காயத்ரிக்கு ரூ.4444 உம் வழங் கப்பட்டது.  மொத்தம் ஒன்பது மாணவிக ளுக்கு பரிசுத் தொகையாக ரூ.42,219 வழங்கப்பட்டதாக முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் சி.வி. விநாயகம் தெரிவித்தார். இவ்விழாவில் ஆசிரியர் கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவர்கள் பெரும் திரளாக பங்கேற் றனர்.