districts

img

மேட்டுபாளையம் அதிமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

மே.பாளையம், ஜன.24- மேட்டுப்பாளையம் நக ராட்சி அலுவலகத்தில் அரசு ஊழி யர்களை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகா ரின் பேரில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆத ரவாளர்கள் 28 மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினரான ஏ.கே.செல் வராஜ் தனது ஆதரவாளர்களுடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகம் வந்திருந்தார். அப்போது,  வார்டு வளர்ச்சி திட்ட பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியை ஒதுக்க, திட்ட மதிப்பீட்டு நகல்  கேட்டு தான் அளித்த கோரிக்கை  மீது ஏன் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை யென, நகராட்சி ஆணையர் அமு தாவிடம், கேட்டதாக கூறப்படுகி றது. அப்போது ஆணையாளர் அமுதா மற்றும் நகராட்சி அதிகாரி கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், சட்ட மன்ற உறுப்பினர் அளித்த கடி தம் காணமல் போனதும் தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த  செல்வராஜ் தனது ஆதரவாளர்க ளுடன் சேர்ந்து கூச்சலில் ஈடு பட்டார். இதைத்தொடர்ந்து, அங்கி ருந்த திமுக கவுன்சிலர்கள்  மற்றும் நிர்வாகிகள் திருப்பி பதி லளிக்க முயன்றனர். அப்போது,  இரு தரப்பினரிடையே வாக்குவா தம் ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொலைபேசி மூலம் தொடர்பு  கொண்டு இரு தரப்பினரிடையே இப்பிரச்சனை குறித்து சமாதானம்  பேசினார். இறுதியில் சட்டமன்ற  உறுப்பினர் வைத்த கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் கொடுத்த வாக்குறுதியின் பேரில், பிரச்சனை தீர்க்கப்பட்டு இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.  இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நகராட்சி ஆணையர் அமுதா, அதிமுக சட்டமன்ற உறுப் பினர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 28 பேர் மீது, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை  அளித்தார். அப்புகாரின் பேரில் நக ராட்சி ஆணையாளரை மரியாதை குறைவாக பேசியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு அலுவலகத்தில் சட்டவிரோதமாக கூடுதல் என 4 பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.