உதகை, பிப்.22- உதகை மார்க்கெட்டில் பொது விநியோக திட்ட இலவச அரிசி பதுக்கி வட மாநில தொழிலாளர்களுக்கு கிலோ 10 ரூபாய்க்கு விற் பனை செய்தது, அதிகாரி களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை யடுத்து, இரண்டு மளிகை கடை வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது விநியோக திட்ட கீழ் வழங்கப் படும் இலவச அரிசியை சிலர், விற்பனை செய்வதாக நீலகிரி மாவட்ட வழங்கல் அலுவ லருக்கு புகார் வந்தது. குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி ஆகியோர் அடங் கிய குழுவினர் உதகை மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குடும்ப அட்டை தாரர்களிடமிருந்து பொது விநியோக திட்ட இலவச அரிசியை வாங்கி, மளிகை கடையில் பதுக்கி வடமாநில தொழிலாளர்களுக்கு கிலோ 10 ரூபாய்க்கு விற்றது விசாரணை யில் தெரிய வந்தது. இதனையடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மாவட்ட வழங்கல் அலு வலர் வாசுகி கூறுகையில், உதகை மார்க் கெட்டில் பொது விநியோக திட்ட இலவச அரிசியை கண்ணன், வையாபுரி என்ற இரண்டு மளிகை கடைகாரர்கள் பதுக்கி விலைக்கு விற்றது தெரிய வந்தது. அவர் களிடமிருந்து, 240 கிலோ இலவச அரிசி பறி முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிக கழகத்திடம் ஒப்படைக் கப்பட்டது. குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் அபராதம் விதிக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.