உதகை, ஜூன் 28- மண்டிகளில் கொள்முதல் விலை உயர்ந் துள்ளதால், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த வெளிநாட்டு காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக் குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்கு களின் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சனை களை எதிர்கொண்டு, வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வரு கின்றனர். இந்நிலையில், கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறு வடைக்கு தயாராக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரட் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப் பட்டது. தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப் பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோ வுக்கு ரூ.55 முதல் ரூ.65 வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் விலை போதுமானதாக இருப்பதால், அதை பயிரிட்டுள்ள விவ சாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கூறுகையில், கேரட் ஒரு ஏக்கர் பயிரிட ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படுகிறது. சாதாரண விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமும், ஹைப்ரிட் விதை கள் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்ய தொழி லாளர் சம்பளம், விதை, உரம், மருந்து ஆகிய வைகளுக்கு என ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. ஒரு ஏக்கரில் 60 முதல் 80 முட்டைகள் கிடைக்கும். நல்ல விளைச்ச லாக இருப்பின் 100 மூட்டை கேரட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது தனியார் நிறுவ னங்கள் விளைநிலங்களுக்கே வந்து நல்ல கொள்முதல் விலை தந்து, அவர்களே அறு வடை செய்து கேரட்டை கொண்டுச் செல் கின்றனர், என்றார்.