districts

கேரட் சாகுபடி செய்யும் தருமபுரி விவசாயிகள்!

தருமபுரி, செப்.16- தருமபுரி மாவட்டத்தில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப விவசாயிகள் கேரட் சாகு படி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்க ளாக உள்ள உதகை, கொடைக்கானல், ஒசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் மட் டுமே விவசாயிகள் அதிகளவு கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வரு கின்றனர். சாகுபடி செய்ய இதமான காலநிலை தேவை. அதிகளவு தண்ணீ ரும், மிதமான வெப்பமும் தேவை. குளிர்பிரதேச காய்கறி என பெயர் பெற்ற கேரட் தற்போது தருமபுரி மாவட் டம், பென்னாகரம் செல்லும் சாலையில் பிளியனூர், ராமனூர், நாகதாசம்பட்டி, குள்ளாத்திரம்பட்டி உள்ளிட்ட பகுதிக ளில் விவசாயிகள் தங்களது நிலங்க ளில், மாவட்டத்தில் விளையும் காய் கறிகளுக்கு மாற்றாக சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். விவ சாயம் சார்ந்த தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மானாவரி சாகுபடி நிலங்களாக உள்ளது. அவற்றில் விவ சாயிகள் சிறு தனியங்கான ராகி, சோளம், பயறு வகைளை சாகுபடி செய்வது தான் வழக்கம். ஆனால், விவசாயிகள் விவசாயத்தில் குறைந்த அளவு தண்ணீரை பயன் படுத்தி கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், கடந்த காலங்களில் தங்களது நிலத்தில் குண்டுமல்லி, நிலக்கடலை, கரும்பு, மஞ்சள் உள் ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்த நிலையில், ஓசூர் பகுதிகளில் விளையும் கேரட் மீது ஆர்வம் வந்தது. அதனை சோதனை முயற்சியாக விதைத்து சாகு படி செய்தோம். தற்போது அறுவ டைக்கு வந்துள்ளது. கேரட் நான்கு மாதத்தில் விளைச்சல் தரக்கூடியது என்பதால், விதைத்து மூன்றரை மாதத் தில் இருந்தே அறுவடை செய்யலாம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும், கேரட் விவசாயத்தில் நன்றாக விளைந் தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றனர். அறுவடை செய்த காய்கறிகளை நகரிலுள்ள மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை மற்றும் அருகில் உள்ள வாரச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல் ஒரு சில விவசாயிகள், வெளி மார்க்கெட்டுக்கு அனுப்பாமல் அதே ஊரில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். சாலை ஓரத்தில் கடை  அமைத்து அதில் கோத்தகிரி, உதகை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்வது போல, கேரட் விற் பனை செய்து வருகிறனர். இந்த சாலை வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்பவர்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். விவசாய நிலத்தில் இருந்து பரித்து கொண்டு வந்து நேரடியாக வெளி மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தோட்டக்கலைத்துறை யினர் உரிய ஆலோசனையும், கடன் உதவி செய்தால் மாவட்டம் முழுவதும் சீதோசன நிலைக்கு ஏற்றார்போல், கேரட் சாகுபடி செய்வதை அதிக ரிக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.