districts

img

புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

பள்ளிபாளையம், பிப்.5- குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி யில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், உலக  புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரா.விமல் நிஷாந்த் தலைமை வகித்தார். பேரணியை முனைவர் சங்கர் மற் றும் ஆங்கிலத்துறை தலைவர் சுரேஷ் ஆகியோர் கொடி யசைத்து துவக்கி வைத்தனர். எக்ஸல் கல்லூரி வளாகத் தில் தொடங்கப்பட்ட பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக  பல்லக்காபாளையம் வரை சென்று அங் குள்ள கிராமப்புற மக்களிடையே, புற்றுநோயின் கார ணங்கள் குறித்தும், புற்றுநோயை ஒழிப்பதற்கு மேற் கொள்ளக்கூடிய உணவு முறைகள் பற்றி மாணவ, மாண வியர் எடுத்துரைத்தனர். மேலும், புற்று நோய்க்கு எதி ரான ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அவர்களிடையே எடுத்து கூறி, அவற்றின் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தனர்.  இப்பேரணியில் பல்லாக்காபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சிமுத்து, பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் சௌந்தரம், உயிர் வேதியியல் மற்றும் மருத் துவ ஆய்வக தொழில்நுட்பவியல் மாணவர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை முனைவர் ஷீஜாராஜன், முனைவர் முனியப்பன், முனைவர் ராதா, உதவி பேராசிரியர் பூபதி ஆகியோர் செய்திருந்தனர்.