நாமக்கல், ஏப்.27- சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி பதிவு அஞ்சல் மூலம் குடியரசுத் தலை வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிப்காட் எதிர்ப்பு இயக்கம், விவசாய முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்கள் விவசாயிகள் உள் ளிட்டோர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று வளையப்பட்டி துணை அஞ்சல் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. இதில் வருவாய்த்துறை மற்றும் சிப்காட் துறை நில எடுப்பு சட்டத்தை தவறாக பயன் படுத்துவதை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடியரசுத்தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.. இதில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ராம்குமார் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.