districts

img

நூறு நாள் வேலை: சிபிஎம் கோரிக்கை இயக்கம் கிராமத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பிரச்சாரம்

உடுமலை, ஆக. 13 - நூறு நாள் வேலைத் திட்டத்தை  முடக்கும் மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆகஸ்ட் 16ஆம் தேதி நடத்தவுள்ள  இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவ தற்காக கிராமப்புறங்களில் நூறு  நாள் வேலைத்திட்ட பணித்தளங் களில் தொழிலாளர்களை சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. நூறு நாள் வேலை திட்டத்தை  முடக்கும் ஒன்றிய மோடி அரசை  கண்டித்து உடுமலையில் வெள்ளிக் கிழமை கோட்டாட்சியர் அலுவல கத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மனுக் கொடுக்கும் இயக் கத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தை விளக்கி நூறு நாள் வேலைத் திட்டப் பணித்தளங்களில் தொழிலாளர்களைச் சந்தித்து, மார்க் சிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்த னர். கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்கும் நூறு நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதி  ஒதுக்காமல், பற்றாக்குறை ஏற்ப டுத்தி தொழிலாளர்களை வஞ்சிக் கும் மோடி அரசின் மக்கள் விரோத  நடவடிக்கையைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சி இந்த இயக்கத்தை நடத் துகிறது. இந்தப் போராட்டத்தை விளக்கும் வகையில் உடுமலை நக ரம், உடுமலை ஒன்றியம், குடிமங்க லம் மற்றும் மடத்துக்குளம் தாலுகா  கட்சியின் நிர்வாகிகள் நூறு நாள்  வேலை நடக்கும் பணி தளங்க ளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் நூறு நாள்  வேலைத் திட்டத்தை மோடி அரசு  சீர்குலைப்பது குறித்து அம்பலப்ப டுத்தியதுடன், அனைத்து தொழிலா ளர்களுக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். வேலை செய்த  நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண் டும். மேலும் நகர்புற உள்ளாட்சி களிலும் இந்த வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவதாக தெரி விக்கப்பட்டது.  திருப்பூர் வடக்கு ஒன்றியம் அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு  சார்பில் பெருமாநல்லூர், ஈட்டிவீரம் பாளையம், கணக்கம்பாளையம், காளிப்பாளையம் ஆகிய பஞ்சாயத் துகளுக்கு உட்பட பகுதிகளில் வேலை செய்யும் 100 நாள் வேலை  திட்ட தொழிலாளர்களிடம் கோரிக் கைகள் குறித்த துண்டு பிரசுரம் விநி யோகிக்கப்பட்டது. இதில் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, பி.மகாலிங்கம், கிளை செயலாளர் கள் கே.சுப்பிரமணியம், எம்.வி. கோவிந்தசாமி, ஆர்.சந்திரன்,  ஆர். செந்தில் குமார், எம்.வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.