districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

சேலம், அக்.28- சேலம் உருக்காலை நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலத்தில் நடைபெற்றது. சேலம் உருக்காலை நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 96 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான உபகரணங்கள்  மற்றும் அதற்கான அளவு எடுத்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஊன்றுகோ்ல், செவிதிரன் கருவி, செயற்கை கால், பேட்டரிசைக்கிள்,கையுரை, சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தனர். இதற்கான கருவிகள் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கலகத் தில் தயார் செய்து வரும் டிச.3 ஆம் தேதியன்று உலக மாற் றுத்திறனாளிகள் தினத்தில் வழங்க உள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சேலம் உருக்கு ஆலை நிர்வாகிகள் உலக நாதன், வெங்கடாசலபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன், பேச்சு பயிற்சி  நிபுணர் ஸ்ரீதேவி மற்றும் எக்காம்வெல் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட சிறப்பு பயிற்றுனர்கள், முட நீக்கு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.