districts

img

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

கோவை, நவ.19- நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நான்கு வழிச்சாலை,  எட்டு வழிச்சாலை, சிப்காட் தொழிற் சாலை, விமான நிலையங்கள், துறை முகங்களுக்கு பல்வேறு கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் அரசுத் திட்டங் களுக்கு விவசாயிகள் ஒப்புதல் இல்லா மல் நிலத்தை கையகப்படுத்த முடியாது  என்ற நிலைப்பாட்டை, தமிழக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம் குழி தோண்டிப் புதைக்கிறது. எதிர்காலத் தில் விவசாயிகளையும் விவசாயத்தை யும் நீர்நிலைகளையும் பாதுகாக்க இச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.  பழனிசாமி தலைமை ஏற்றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில  துணை தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டத் தலைவர் இளங்கோ வன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழ னிசாமி மற்றும் இரு சங்கங்களின் நிர் வாகிகள் உட்பட திரளான விவசாயி கள் பங்கேற்றனர். ஈரோடு இதே போன்று, ஈரோடு மாவட்டம், பெருந்துறை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் எஸ்.வி.மாரிமுத்து மற்றும் பி.எஸ்.பழ னிசாமி ஆகியோர் தலைமை வகித்த னர். மாநில துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, தென்னை விவசாயிகள் சங் கத் தலைவர் ஆர்.அர்ஜுனன், தாலுகாத்  தலைவர் கே.குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதி நாராயணன் தலைமை வகித்தார். இதில்  சிபிஐ விவசாய சங்க தலைவர் செல்வ ராஜ், ஏஐடியுசி சங்க தலைவர்கள் தன சேகரன், சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே. பூபதி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் நல்லாகவுண்டர், பால்  உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் என்.ஜோதி, உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான கூட்டியக்கத்தின் தலைவர் செல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சிஐடியு  தலைவர் ஐ.ராயப்பன் நன்றி கூறி னார். சேலம் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர்கள் ஏ.ராம மூர்த்தி, என்.கே.செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் பி.தங்கவேலு, எம்.ராம சாமி, பழனிமுத்து, பொன்.ராமன், பூபேஷ், நடராஜன், வெற்றிவேல், சிபிஎம் தாலுகாச் செயலாளர் கந்த சாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற் றினர். இதில் வாழப்பாடி, ஆத்தூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயி கள் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூரில் செவ்வாயன்று மாலை  திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னச்சாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் கோரிக்கை விளக்க  உரையாற்றினார். துணைச் செயலாளர்  ஐ.எஸ். தட்சிணாமூர்த்தி நன்றி கூறி னார்.