ஈரோடு, டிச. 4- பிரதமர் காப்பீட்டு திட்டத் திற்கு பயனாளிகளைச் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் வேலைப்பளுவை திணிப்பதற்கு மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வ லர்கள் எதிர்ப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவம் என்னும் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் இல்லம் தேடி சென்று நோய்களைக் கண்ட றிவது, நோய்க்கான சிகிச்சை, தொடர் கவ னிப்பு என நிலையான சேவைகள் அளித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளின் நியாயமான பல்வேறு கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்பட வில்லை. இந்நிலையில், இவர்களுக்கு கூடுதலான வேலைப்பளுவை திணிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களைத் தேடி மருத் துவ ஊழியர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி தலைமையில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என நிர்ணயம் செய்ய வேண் ்டும். முழுநேர பணியாளர்கள் என அங்கீ கரிக்க வேண்டும். மேலும் மருத்துவத்து றையின் ஊழியர்கள் என்று அறிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பணியாற்று வதற்குத் தேவையான செல்போன், இணைய வசதி, பதிவேடுகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். கூடுதலாக சுமத்தப்பட்டுள்ள பிரதமர் காப்பீட்டு திட்டத்திற்குப் பயனாளிக ளைச் சேர்ப்பது மற்றும் புற்று நோய் கண்ட றிவது உள்ளிட்ட வேலைப் பளுவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.