கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல், ஜூலை 9- கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கு பெண்களில் சிறந்த சாதனை புரிந்தோர்களுக்கு சுதந்திர தின விழாவில் மாநில அளவில் “கல்பனா சாவ்லா விருது” வழங்கப்ப டவுள்ளது. பெண்களில் சிறந்த சாதனை புரிந்த நபரிட மிருந்து உரிய கருத்துரு வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15.07.2024 வரை பெறப்படும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் அறை எண்.234, கூடுதல் கட்டி டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரி மற்றும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04286-299460 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மனநல காப்பகத்திற்கு சீல்
உதகை, ஜூலை 9- அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பக கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு, அங்கு இருந்த 15 பேரை மீட்டு கோவையில் செயல்படும் மனநல மருத்துவ காப்பகத் தில் சேர்த்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே இயங்கி வந்த மனநல காப்பகம் எந்தவித அனுமதியும் பெறாத நிலை யில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வகையி லும் கொடுமைப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இத னைத்தொடர்ந்து இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட் டது. எனினும் முறையான அனுமதி பெறவோ, வசதிகள் ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்காத நிலையில், இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், செவ்வாயன்று காலை கூடலூர் கோட்டாட்சியர் சரவணக்குமார், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் தங்கதுரை, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, மனநல மருத்துவர் விவேக், மகப்பேறு மருத்துவர் கௌசிகா, டி.எஸ்.பி. சரவணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவ லர் கதிரவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பின் காப்பகத்தில் வைக்கப்பட் டிருந்த 13 மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் என மொத்தம் 15 பேரை மீட்ட அதிகாரிகள், கோவையில் செயல்படும் மனநல மருத் துவ காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பக கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டது.
அரூரை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்
தருமபுரி, ஜூலை 9- அரூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட் டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற் றப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் பேரூ ராட்சியின் சிறப்பு மன்றக் கூட்டம், பேரூ ராட்சித் தலைவர் இந்திராணி தனபால் தலை மையில் திங்களன்று நடைபெற்றது. பேரூ ராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், துணைத்தலைவர் சூர்யா து.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட் டத்தில், அரூர் பேரூராட்சியானது 2023 ஆம் ஆண்டில் சிறப்பு தேர்வு நிலை பேரூ ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டு களும், 106 தெருக்களும் உள்ளன. இந்தப் பேரூராட்சியானது 14.75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இப்பேரூ ராட்சியில் 2011 ஆம் ஆண்டின் கணக்கெ டுப்பின்படி மக்கள் தொகை சுமார் 25 ஆயி ரம் இருந்த நிலையில், தற்போது சுமார் 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட் டத்தில் தருமபுரிக்கு அடுத்த பெரிய நகரம் அரூர் நகரமாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகை அடிப்படையிலும், வருவாய் அடிப்ப டையிலும் அரூர் சிறப்பு நிலை பேரூராட் சியை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் கடத்தியவர் கைது
உதகை, ஜூலை 9- சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ போதைப்பொருள் கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நாடு காணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு இருந்தனர். அப் போது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். இதில், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிஜாம் (30) என்பவரிடம், எம்டிஎம்ஏ, (மெத்திலின் டியோச்சி மெதம்பேட் எமைன்) என்ற சர்வ தேச அளவில் தடை செய்யப்பட்ட, 30கிராம் போதை பொருள் மற்றும் போதைபொருள் பயன்படுத்துவதற்கான உபகரணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரி டம் நடத்திய விசாரணையில், மைசூரில் இருந்து, போதை பொருள் வாங்கிச் சென்று, கேரளா மாநிலம் கோழிக்கோடு சுற்று வட்டார பகுதிகளில், கல்லுாரி மாணவர் கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைய டுத்து, போலீசார் நிஜாமை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சர்வ தேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த போதை பொருளை குடுவை போன்ற கண் ணாடி உபகரணத்தின் உள்ளே வைத்து, லேசாக சூடு படுத்தினால், அதிலிருந்து எழும் புகையை சுவாசித்தால் போதை தலைக்கு ஏறும். இதற்கு இளைஞர்கள் பலர் அடிமை யாக உள்ளனர். பிடிக்கப்பட்ட போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் மதிப்புள் ளது என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நான்கு புதிய கிளைகள்
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க நான்கு புதிய கிளைகள் திருப்பூர், ஜூலை 9 – திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங் கங்களுக்கு புதிதாக நான்கு கிளைகள் தொடங்கப்படுகிறது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு கடன் சங்கம், சின்னப்புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றின் புதிய கிளைகள் தொடங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் புதிதாக 100 கிளைகள் தொடங்க அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இங்கு நான்கு கிளைகள் செயல்பட உள்ளன.
அவிநாசி சுமங்கலி சில்க்ஸ் புதுப்பொலிவுடன் இன்று திறப்பு விழா!
அவிநாசி, ஜூலை 9- அவிநாசியில் பாரம்பரியமிக்க சுமங்கலி சில்க்ஸ் துணிக் கடை புதன்கிழமை புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெறு கிறது. அவிநாசியில் தையல் தொழிலாளியாக இருந்தவர் நடரா ஜன். இவரது கடுமையான உழைப்பினால் சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பு சுமங்கலி சில்க்ஸ் என்ற பெயரில் சிறிய அள வில் ஜவுளி கடை தொடங்கினார். இவரது ஜவுளி கடையில் தரம் நிறைவு, விலை குறைவு காரணமாக சாமானிய ஏழை, எளிய மக்கள் நம்பிக்கையுடன் இவரது கடையை நாடி வந்த னர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமங்கலி சில்க்ஸ் துணிக்கடை மக்களின் நம்பிக்கை பெற்ற கடை என்று பெயர் பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்கு றைவு காரணமாக நடராஜன் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து சுமங்கலி சில்க்ஸ் நடராஜ் அவர்களின் மகன் கதிர் (எ) கதிரேசன் இந்த ஜவுளி கடையை நடத்தினார். இவரும் இவரது தந்தையைப் போலவே கடின உழைப்புடன் செயல் பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையில் மின் கசிவினால் பல கோடி மதிப்பிலான துணிகள் சேதம டைந்ததது. எனினும் மனம் தளராமல் கதிர், இந்த கடையை புதுப்பித்து புத்துயிர் ஊட்டினார். இந்நிலையில் மீண்டும் புதிய பொலிவுடன் சுமங்கலி சில்க்ஸ் ஜவுளிக்கடை புதன்கிழமை திறப்பு விழா காணவுள்ளது. இந்த திறப்பு விழாவை ஒட்டி துணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கடை உரிமையாளர் கதிர் தெரிவித்தார். அவிநாசி மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று இந்த கடை சிறப்புடன் வள ரும் என்று வாடிக்கையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சுடுகாட்டுப் பாதையை தார்ச்சாலையாக சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 9 - ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னத் தூர், கம்மாளக்குட்டை கிராம மக்களின் சுடுகாட்டுப் பாதையை முழு தார்ச்சாலையாக சீரமைத்துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ள னர். இது குறித்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் கம்மாளக்குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டுப் பாதை பாதி தார்ச் சாலையாகவும், மீதி மண் சாலையாகவும் உள்ளது. தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள் ளது. அண்மையில் பெய்த கனமழையில் மண் அரிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடலை அந்தப் பாதையில் கொண்டு போக முடியாத நிலை உள்ளது. இதை நேரில் ஆய்வு செய்து பாதையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கம்மாளக் குட்டை மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன் னத்தூர் நகர கிளைச் செயலாளர் சின்னசாமி, கம்மாளக் குட்டை 2ஆவது வார்டு உறுப்பினர் ராஜ்பரத், முருகேசன் ஆகியோர் இந்த மனுவைக் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் கு.சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இப்பிரச்சனை யில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
வேளாண் பல்கலையில் புதிய பட்டையப் படிப்புகள்
வேளாண் பல்கலையில் புதிய பட்டையப் படிப்புகள் கோவை, ஜூலை 9- தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் புதிய பட் டையப் படிப்புகள் குறித்த அறிவிப்பை பல்கலை கழக துணை வேந்தர் முனைவர் கீதா லட்சுமி அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து திங்களன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கோவை மாவட்டம், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சிறப்பாகச் செயல் பட்டு வருகின்றது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள் தங்களின் தொழில் நுட்ப அறிவையும் அனுப வங்களையும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக புதிய தொழில் நுட்ப பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக் கலை செடிகள் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள் (Protected Cultivation), ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக் கலைப் பயிர்களின் சாகு படி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில் நுட்பங்கள் (Smart Farming) மற்றும் வேளாண் மையில் ஆளில்லா வான்கலம் தொழில் நுட்பங்கள் (Drone Technology) போன்ற புதிய பட்டயப் படிப்பு பாடங்கள் நடத் தப்பட உள்ளன. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக் கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலை தூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்க ளின் வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிகளில் நிலம், போக்கு வரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதாரம், காற்று மற்றும் நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்ப டுத்துவதன் மூலம் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப் புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இதில் அலங்காரத் தோட் டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங் கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்க ழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு துவங் கப்பட உள்ளன என்றார். முன்னதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தில் புதிய தொழில் நுட்ப பாடங்கள் குறித்து பட்டைய படிப்பு களுக்கான அறிக்கையை துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி வெளியிட்டார்.
கல்லாற்றில் தடுப்பணை: அதிகாரிகள் ஆய்வு
தருமபுரி, ஜூலை 9- அரூர் அருகே கல்லாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட் டப்பட்டி பகுதியில் பாயும் கல்லாற்றில், மழை காலங்களில் அதிகளவில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க, கல்லாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டுவதன் மூலம், புதூர் கோட்டச் சரடு, மங்களப்பட்டி, கோட்டப்பட்டி, சூரநத் தம், செங்கான்டிப்பட்டி, கட்டகாடு உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே, கால்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயி கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அரூர் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் நீர்வ ளத்துறை அதிகாரிகள், திங்களன்று கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டு வது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து கடைகள் உடைப்பு
உதகை, ஜூலை 9- உதகை மார்க்கெட்டில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் கடை உரிமையா ளர்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் காய்கறி, மளிகை, பேன்சி ஸ்டோர் என, ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில், திங்க ளன்று இரவு மர்ம நபர்கள் சிலர் மார்க்கெட் டில் புகுந்து அடுத்தடுத்து ஐந்து கடைகளை உடைத்துள்ளனர். மேலும், கடையில் வைத் திருந்து 500, 1000 ரூபாய்களை திருடி சென் றுள்ளனர். இதையடுத்து, செவ்வாயன்று உதகை, பி 1 காவல் நிலையத்தில் கடை உரி மையாளர்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், ஆய்வாளர் முரளிதரன் உத்தரவின் பேரில் போலீசார் உடைக்கப்பட்ட கடை யில் ஆய்வு மேற்கொண்டனர். கை ரேகை தட யங்களை சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்க ளில் பதிவாகியுள்ள நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத் தியுள்ளனர்.
அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்
அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல் தருமபுரி, ஜூலை 9- பென்னாகரத்தில் இருந்து ஜெல்மாரம்பட்டிக்கு கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஜெல்மாரம்பட்டி. இங்கு செயல் பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் எலுமல்மந்தை, பவளந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் இருந்து ஜெல்மாரம்பட்டிக்கு எலுமல்மந்தை, பவளந்தூர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி செல்லும் நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் இவ்வாண்டு தொலை விலுள்ள பாப்பாரப்பட்டி, பென்னாகரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். ஜெல்மாரம் பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந் தற்கு பேருந்து வசதியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, இப்பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.