திருப்பூர், அக். 3 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் பிரதேச கமிட்டியின் செயலாள ராக செயல்பட்ட வருமான கல்கத்தா ஆர்.பெரியசாமியின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி வியாழனன்று கடைப்பிடிக் கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாநகரம் கருவம்பாளையம் கிளை அலு வலகம் முன்பாக தோழர் ஆர் பெரியசாமியின் படம் வைக்கப் பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினர்கள் பா.ஞானசேகரன், எஸ்.பானுமதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி. ஈஸ்வரமூர்த்தி, கிளைச் செயலா ளர்கள் பி. கோபாலகிருஷ்ணன், ஆர்.ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.