வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் உதகை, மார்ச் 16- மக்கள் ஒற்றுமையை சீர்கு லைக்கும் சிஏஏ சட்டத்தை அமல்ப டுத்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து பரவலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக தேவாலாபஜாரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சங் கத்தின் நிர்வாகிகள், பெரியார்ம ணிகண்டன், இராசி இரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வர்கீஸ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் இதேபோன்று இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகரக்குழு சார்பில், சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் வி.ஜெகநாதன், மேற்கு மாநகரத் தலைவர் கோபி, பொருளாளர் பகத்சிங், முன்னாள் பொருளாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு காளை மாடு சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநகரச் செய லாளர் சாதிக் தலைமை வகித் தார். வடக்கு, தெற்கு மாவட்ட நிர் வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.