districts

img

சி.ஞானபாரதி நினைவேந்தல் கூட்டம்

கோவை, செப்.5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர், எழுத்தாளர் சி.ஞானபாரதி நினைவேந்தல் கூட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோவை மாவட்டக் குழுக்கள் சார்பில் மூத்த  வழக்கறிஞர், எழுத்தாளர் சி.ஞானபாரதி நினைவேந்தல் வியாழனன்று கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந் தன் தலைமை வகித்தார். இதில், தமுஎகச மாவட்டத் தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ.கரீம், மூத்த வழக்கறிஞர்கள் பி.நந்தகுமார், ஆர்.பால கிருஷ்ணன், கே.எம்.தண்டபாணி, கே.சுப்ர மணியம், கே.சுதீஷ், வேலுச்சாமி, வெண் மணி, சிவசாமி தமிழன், எழுத்தாளர்கள் இரா. முருகவேள், ச.பாலமுருகன், கா.சு.வேலா யுதம், மற்றும் டி.அய்யப்பன், ததீஒ முன் னணி மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞா னம், வழக்கறிஞர் ஜமிஷா, பத்திரிக்கையா ளர் அ.ர.பாபு உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று இரங்கல் உரையாற்றினர். முடிவில், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மத்தியக்  குழு உறுப்பினர் எஸ். மாசேதுங் நன்றி  கூறினார். இதில், அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜோதி குமார், மாவட்டத் தலைவர் என்.ராமர் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.