திருப்பூரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் மார்பளவு சிலையை மாற்றி, முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரக்கோரி வெள்ளியன்று மேயர் ந. தினேஷ்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநிலச் செயலாளர் சி.கே.கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பா.ஞானசேகர், ஆதித்தமிழர் சனநாயக பேரவை நிறுவனர் அ.சு.பவுத்தன், ஆதித்தமிழர் பேரவை மாநகரச் செயலாளர் கவிதா, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர், தேசிய புலிகள் கட்சி தலைவர் குணவேந் தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.