உடுமலை, ஜன.19- மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் செல்வதால் பயணிகள் அவதி குள்ளாகின்றனர். இதன் மீது போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மடத்துக்குளம் தாலுகா தலைமை பேருந்து நிலையம் பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுச்சாலையில் பல லட்சம் மதிப்பில் வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து வசதி களுடன் கட்டப்பட்டு உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் உள்ளேயே ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், கிராமங் களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் உள்ளே வந்து செல்வ தாகவும். நகரப் பேருந்துகள் எதுவும் உள்ளே வராமல் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் நின்று செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கையில், மடத்துக்கு ளம் பேருந்து நிலையம் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருப்பதால் எப்பொழுதும் பழனி மற்றும் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு செல்ல அதிக பயணிகள் வருகிறார் கள். மேலும், இங்கு தான் ரயில் நிலையமும் உள்ளது. நகரப் பேருந்துகள் எதுவும் உள்ளே வராமல் தேசிய நெடுச்சா லையில் நின்று செல்வதால் சாலையை கடந்து பேருந்துக்கு வரும் போது விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பேருந்துகள் வரும் நேரம் குறித்தும் குழப்பம் ஏற்படுகிறது.பேருந்துகள் உள்ளே வராமல் செல்வதால் தனியார் வாகனங்களால் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதை போக்குவரத்துத் துறை உறுதிப் படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.