நாமக்கல், நவ.26- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க சனியன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை கடந்த நவ.22 ஆம் தேதியன்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மருத்துவமனை நாமக்கல் நகரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள், நோயாளிகள் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு கூடுதல் பேருந்துகளை மருத்துவமனை வரை இயக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மருத்துவர்கள், செவி லியர்கள், இதர பணியாளர்கள் பகல், இரவு நேரங் களில் வந்து செல்வதிலும் சிரமம் உள்ளது. இந்நி லையில், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சனியன்று ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நடை பெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.என். ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராம லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிய அரசு மருத்துவமனைக் கட்டடத்தை முழுமையா கச் செயல்படுத்துவது தொடர்பாகவும், அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தற்போதைய மோகனூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து உபகர ணங்களை புதிய மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகள் திங்களன்று (இன்று) முதல் தொடங்கப்படுவதாக மருத்துவமனை நிர் வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருச்செங் கோடு நோக்கி செல்லும் நகர, புறநகர் பேருந்து களை அரசு மருத்துவமனை வரை சென்று திரும்ப வும், இதற்காக அங்கு ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. ஷேர் ஆட் டோக்களை, நோயாளிகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மருத்துவமனைக்கு வருவோர் புதிய மருத்துவம னைக்கு செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக அறிவிப்பு பலகைகளை வைக்க வேண் டும். அனைத்து நோயாளிகள், பொதுமக்களிடம் புதிய மருத்துவமனை முகவரியை பணியாளர் கள் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம் என்றும், பழைய மருத்துவமனை கட்டத் தில் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து உரிய வழி வகைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என வும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையர் கே.சாந்தா அருள்மொழி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.