districts

img

கழிவுநீரில் நீந்தி சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் நிலை

சேலம், ஜூன் 28- ஆத்தூர் அருகே கழிவுநீரில் நீந்தி சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவல நிலையை போக்க, பாலம் கட்டித்தர வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கல்லாநத்தம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு ஆத்தூர் நகருக்கு செல்ல வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் சுற்றி கொண்டுதான் வர  வேண்டும். இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வசிஸ்ட்டா நதியின்  குறுக்கே பாலம் அமைக்கப்பட் டால், அரை கிலோமீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று  பயன் அடைவார்கள். அதேபோல்  துலுக்கனூர் பகுதியில் உயிரிழந்த வர்களின் உடல்களை அடக்கம்  செய்ய வசிஸ்ட்டா நதியின் அக்க ரையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து வர வேண்டும். அதனால், நதியில் தேங்கியுள்ள கழிவுநீரில் இறங்கி, இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம் அரங்கேறி வரு கிறது.  எனவே, தேசிய நெடுஞ்சாலை முதல் துலுக்கனூர் வரை செல்லும் சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றி யும், வசிஸ்ட்டா நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும். துலுக் கனூர் பகுதியிலுள்ள சுடுகாட்டிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப் பிலிருந்து மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று,  பாடைகட்டி கொண்டு வந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். துலுக்கனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகாச் செய லாளர் முருகேசன் தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலு காக்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரபு, எல்.தங்கம்மாள், சி.மாரிமுத்து, ஆர்.வெங்கடாசலம், வரதராஜ் மற் றும் மலைக்குறவன் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தனபால், மாவட்டத் தலைவர் மனோகரன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.