கோவை, ஜன.16- தமிழர்களின் பண்பாட்டு பெருவிழா வான பொங்கல் விழாவை தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் முற்போக்கு இயக்கங்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இதில் புதுப்பானை யில் புத்தரிசியுடன் சமத்துவப் பொங் கலை சமைத்து படைத்தனர். கோவை, தண்ணீர் பந்தல் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தண்ணீர்பந்தல் 2 ஆவது கிளை சார்பில் 38 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங் கல் விளையாட்டு விழா ஜன.14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், மினி மாரத்தான், குச்சி சுத்தும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். புதனன்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழா விற்கு வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஸ்ரீதர் தலைமை ஏற் றார். கிளைச் செயலாளர் கே.பூவேஷ் வரவேற்றார். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அர்ஜூன், மாவட்டப் பொருளாளர் எம்.தினேஷ் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஏ.என்.ராஜா, பி.நித்யா ஆகியோர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினர். முடிவில், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆர். மோகன் நன்றி கூறினார். இதேபோன்று, விளாங்குறிச்சி ஜீவாதிடலில் வாலிபர் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற பொங்கல் விளை யாட்டு விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. கபடி போட்டியை மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா துவக்கி வைத்தார். தொடர்ந்து, விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா கே.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கே.அபிஷேக் வரவேற்பு உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்தி ரன், எஸ்.எஸ் குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வாலி பர் சங்கம் சார்பில் 19- ஆம் ஆண்டு பொங்கல் விழா, மக்கள் ஒற்றுமை விழா நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலை வர் உமாராணி தலைமையில் பெண் கள் புதுப்பானை வைத்து புத்தரிசிப் பொங்கலிட்டனர். மாலையில் சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள், மூத்த குடி மக்கள் ஆகியோருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இரவு பாட்டுப் போட்டி நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவநாதன், ஆர்.கே. பி.பெருமாள், பி.மணி, எம்.ஜெகநாதன் ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வேலுச்சாமி, ஆதவன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வாகி ஆர்.நாகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக விழாவில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 40 பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங் கப்பட்டது. அவிநாசி அவிநாசி அருகே முத்து செட்டி பாளையத்தில் வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் வியாழனன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. பகத்சிங் நினைவுத்திடலில் நடை பெற்ற நிகழ்வில் அமைப்பின் கொடியை வாலிபர் சங்க முன்னாள் ஒன் றியத் தலைவர் பாபு ஏற்றி வைத்தார். முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பன்னீர்செல்வம் விளையாட்டுப் போட்டி களை துவக்கி வைத்தார். இதில் ஓட்டப் பந்தயம், சாக்குப் போட்டி, பலூன் உடைத்தல், பிஸ்கட் கடித்தல், உறிய டித்தல் உள்ளிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் மணிகண்டன், ஒன்றியத் தலை வர் சந்தோஷ், ஒன்றியச் செயலாளர் ஹனிபா, ஒன்றியப் பொருளாளர் வடி வேல் மற்றும் மாணவர் சங்க நிர்வாகி கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவை வாழ்த்தி சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாதர் சங்கம், தமுஎகச நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றி னர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையத் தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் 29 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா வியாழ னன்று நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன், முன்னாள் மாவட்டப் பொருளாளர் சி.முருகேஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊனாத்திபுதூர் கிளையில் நடை பெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் என். பாலசுப்பிரமணி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா, வாலிபர் சங்க தாலுகாச் செயலாளர் அன்புஜனாதி பதி மற்றும் சிபிஎம் மாவட்டகுழு உறுப்பி னர் ஆர்.அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோபி
ஈரோடு கோபி அருகே உள்ள கூக லூர் 4 ஆவது வார்டில் தமிழர் திரு நாளை முன்னிட்டு பேரூர் திமுக சார்பில் பேரூர் கழகச் செயலாளர் ராஜாராம் தலைமையில் வார்டு கழகச் செயலா ளர் ச.ரமேஷ் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா புதனன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரைபொங்கலுடன் உணவை வழங்கினர் இதைதொடர்த்து கோலப்போட்டி யில் பங்கேற்ற பெண்களையும், திரு நங்கைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் வெங்கடாசலம் வீடு வீடாக நடந்து சென்று பரிசு வழங்கி பாராட்டியது கூகலூர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம்
மேட்டூர் - கொளத்தூர் தமுஎகச, பாலர் பூங்கா இடைக்கமிட்டி கரு மலைக்கூடல் ஏபிசி மூன்று கிளைகள் சார்பில் சமத்துவப் பொங்கல் நடைபெற் றது. இதில் இஸ்லாமியர்கள், கிருத்து வர்கள், இந்துக்கள் கூடி குலவையிட்டு கும்மி அடித்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். அதன் பிறகு குழந்தை கள், பெண்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. மாலை ஆங்கிலம் கலக்காமல் தமி ழில் பேசுவது, மூலிகைகள் பெயர் கூறு வது, பொது அறிவுப் போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், சங்க இலக்கிய நூல்களின் பெயர்கள் கூறல், குழந்தைகளுக்கு தமி ழில் பெயர் சூட்டுவது உள்ளிட்ட நிகழ்வு கள் நடைபெற்றது. இந்நிகழ்வை தமுஎ கச, பாலர் பூங்கா அமைப்பினர் நடத்தி னர்.