districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநாடு

சேலம், ஜூலை 26- ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலு கையை மீண்டும் வழங்க வேண்டும் என அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆறாவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.  சேலத்தில் பிஎஸ்என்எல் ஒய்வூதியர் சங்க 6 ஆவது மாநாடு ஒய்எம்சிஏ அரங்கத்தில், வெள்ளியன்று நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மதியழகன் தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர், பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் மாவட்டச் செயலாளர் கோபால், தலைவர் ஹரிஹரன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்மணி, பொருளாளர் மைக்கேல் ஆண் டனி ஆகியோர் உரையாற்றினர். இதில், 15 சதவீத அடிப்படையில் பென்ஷன் மாற்றத்தை வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில்வேயில் கட்டண சலுகை வழங்கிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவ னத்தை பொதுத்துறை நிறுவனமாகவே பாதுகாத்திட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி 5 ஜி சேவை களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.