பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய மக்கள் மீது மிகக் கொடுமையான அடக்கு முறையையும், சுரண்டலையும் நிகழ்த்தி வந்த காலம் அது. குறிப்பாக இந்திய மக்களின் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துச் சென் றது மட்டுமல்லாமல் கடுமையான வரிகளை மக்கள் மீது சுமத்தி கொள்ளையடித்து வந்தது. அத்தகைய வரிகளிலேயே மிக கொடுமையா னது தான் இந்த திமிர் வரி சுதந்திரப் போராட் டக்காரர்களை காட்டி கொடுக்க மறுத்ததற்கு தான் இந்த திமிர் வரி கோவை மக்கள் மீது சுமத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அப்போதைய காங்கி ரஸ் கட்சி 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி “வெள் ளையனே வெளியேறு இயக்கத்தை” அறி வித்தது பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினர் இந்த போராட்டத்தை இந்தியா முழுமைக்குமான புரட்சியாக மாற்ற வேண்டும் என ஒரு பகுதியினர் முன்னெடுத்தனர். ஏற்க னவே தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அப்போதுதான் 1942 ஜூலை மாதம் தடை நீக்கப்பட்டிருந்தது. கொடுங்கோலன் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் ஃபாசிஸ்டிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் சோவியத் யூனியனோடு பிரிட்டனும், அமெரிக்காவும் கூட்டணி அமைத்ததின் விளைவாக கம்யூ னிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கியிருந்தாலும், தடை செய்யப்பட்ட காலத்தில் கைது செய்யப் பட்ட கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் சிறையி லேயே இருந்தனர். 1934யில் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த கம்யூனிச, சோசலிச ஆதரவாளர்கள் காங் கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கி இருந்த னர். அவர்கள் மிகத்தீவிரமாக விடுதலை போராட் டங்களை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டி கூட்டங்களில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி சார்பில் தனியாக தீர்மானங் களை நிறைவேற்றுவது, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அத்தகைய நடவடிக்கை களின் ஒரு பகுதியாகத் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தபோது காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சியின் ஒரு பகுதி யினர் இந்த போராட்டத்தை புரட்சிகர நடவடிக் கையாக முன்னெடுக்க வேண்டும் என கருதி னர். அந்த வகையில் கோவையில் இருந்து பம்பாய் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கெ டுத்த அவிநாசிலிங்கம் சோசலிஸ்டிகளின் துண்டு பிரசுரங்களை எடுத்து வந்து கோவை யின் முன்னணி போராட்டக்காரர்களாக இருந்த என்.ஜி.இராமசாமி, கே.வி.இராமசாமி போன்றோர்களோடு பேசி தீவிரமான போராட் டமாக முன்னெடுக்க திட்டமிட்டார்.
போராட்ட அறைகூவல்
இன்றைய வ.உ.சி. பூங்காவில் நூற்றுக் கணக்கான மக்களை திரட்டி என்.ஜி.ராமசாமி, கே.வி.ராமசாமி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம், நமது தேசத்தை நாமே ஆளுவதற்கு இது ஒரு வாய்ப்பு, மகாத்மா காந்தி ‘’செய் அல்லது செத்துமடி’’ என முழங்கியதன் நோக்கமும் இதுதான் என முன்வைத்து உணர்ச்சிப்பீரிட பேசி கோவை மக்களிடையே போராட்ட உணர்வை தட்டியெழுப்பினர். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி காந்தியவாத போராட்டம் என்பது சாத்வீகமான முறையில் போராட்டங் களை முன்னெடுப்பது என்பது தான் மிகவும் முக்கியமானது. குறிப்பாக போராட்டம் நடத்தும் போது அத்தகவலை பிரிட்டிஷிடம் தெரிவித்து எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அகிம்சா வழி போராட்டத்தையே முன்வைக்க வேண்டும். வன்முறை, பலவந்தங்களில் ஈடுபடக் கூடாது, என்றனர். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் மிகப்பெரும்பாலானோர் செயல்பட்டு வந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியோ புரட்சிகர போராட்டங்களையே முன்னெடுத்தனர். ராணுவக் கொத்தளங்களை தாக்குவது, தள வாடங்களை கைப்பற்றுவது, ரயிலை கவிழ்ப் பது, ராணுவ வாகனங்களை தீ வைத்து எரிப் பது, காவல்நிலையங்களை தாக்குவது, கள்ளுக்கடைகளை உடைத்து நொறுக்குவது, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை கைப் பற்றுவது போன்ற புரட்சிகரமான நடவடிக்கை யில் ஈடுபட்டு வந்தனர். அத்தகைய போராட் டங்களையே தொழிற்சங்க வாதிகளான இவர் களும் முன்வைக்கலாகினர். சிங்காநல்லூரில் ரயில் கவிழ்ப்பு 1942 ஆகஸ்ட் 7ல் அறிவிக்கப்பட்ட ‘’வெள் ளையனே வெளியேறு இயக்கம்” ஆகஸ்ட் 13 ஆம் தேதி கோவையில் உச்சத்தை அடைந்தது. குறிப்பாக அரவங்காடு ஆயுத கிடங்கிலிருந்து ஆயிரக்கணக்கான ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு கூட்ஸ் ரயில் ஒன்று வரு வதை துப்பறிந்த விடுதலைப் போராட்ட வீரர் கள், போத்தனூர் அருகே ரயில் கடக்கும் போது கவிழ்க்க திட்டமிட்டனர். அதன்படி பயணிகள் ரயில் சென்றவுடன் திட்டமிட்டு ரோந்து போலிசிடம் மாட்டிக் கொள்ளாமலி ருக்க முட்புதருக்குள் உடலில் சாக்குகளை சுற் றிக் கொண்டு உருண்டு வந்து, தண்டவாளங் களை பெயர்த்து தகர்த்தனர். திட்டமிட்ட படியே தடம் புரண்ட இரயில் பெரும் மோதல் சத்தத்தோடு 12 பெட்டிகள் நிலைகுலைந்து போனது. சம்பவம் நடந்து சில நிமிடங்களி லேயே இதை நிகழ்த்திய இளைஞர்கள் தலை மறைவாகினர். இதற்கிடையே போராட்டகாரர் கள் பலரை கைது செய்ய துவங்கி இருந்தது பிரிட்டிஷ் அரசு.
சூலூர் ராணுவ விமான நிலையம் எரிப்பு
கோவை சூலூரில் அமைந்திருந்த பிரிட் டிஷ் ராணுவ விமான நிலையத்தை தீக்கிரை யாக்குவது என முடிவெடுத்திருந்த இளைஞர் படை சலவைத் தொழிலாளி பழனியப்பன் என்பவர் தயாரித்துக் கொடுத்த வெண்டை எனும் கையெறிக் குண்டு மூலம் தாக்குவது என முடிவெடுத்திருந்தனர். அதன்படி ஆகஸ்ட் 26 ஆம் தேதி 1942ல் கையில் தீப்பந்தங்களு டன், மண்ணெண்ணெய் கேனுடன் வந்த இளைஞர்கள், ராணுவ விமான நிலையத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் குடியிருப்புகளை, சத்தமிட்டு மக்களை வெளியேற செய்துவிட்டு, ஒரு சில நிமிடங்களிலேயே கையில் வைத் திருந்த வெண்டை என்ற ஆயுதத்தை பற்ற வைத்து ராணுவ கொத்தளத்தின் மீது எரிந்த னர். இதில் 30-க்கும் மேற்பட்ட கொட்டகை கள் 25 லாரிகள் தீக்கிரையானது. என்.ஜி.ராமசாமி உள்ளிட்ட கோவை இளைஞர்கள் குறிப்பாக கண்ணம்பாளையம், குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இந்த நடவடிக்கையில் ஈடு பட்டனர். தாக்குதலை தொடுத்த சில நிமிடங் களிலேயே அவ்விடத்தை விட்டு தப்பி ஓடிய இளைஞர்களை சிறிது நேரத்தில் வந்த ராணுவம் தேட துவங்கியது முட்புதருக்குள் சர மாரியாக துப்பாக்கியால் சுட்டது. மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று பூட்ஸ் கால் களால் குழந்தைகளையும், சிறுவர்களையும், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் அடித்து துன்புறுத்தியது. துப்பாக்கியை காட்டி மிரட்டியது யாரும் போராட்டக்காரர்களை காட்டிக் கொடுக்கவில்லை. அந்த தாக்குதலை யார் தொடுத்தார்கள் யார் பங்கேற்றனர் என் பதை ஒருவரும் சொல்லவில்லை.
திமிர் வரி
தாக்குதலில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட போராளிகளும் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது சரணடையவும் கூடாது உயிரே போனாலும் இத்தகைய நடவடிக் கையை கைவிடக்கூடாது என முடிவு எடுத்த தன் அடிப்படையில், யாரும் சரணடைய வில்லை யாரும் யாரையும் காட்டிக் கொடுக்க வில்லை. பொதுமக்களும் போராளிகளை காட்டிக் கொடுக்காததால் ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பிரிட்டிஷ் அரசு அவர் கள் மீது இவ்வளவு திமிரோடு இவர்கள் காட் டிக் கொடுக்க மறுப்பதை வைத்தே அவர்கள் மீது திமிர் வரி போடுவது என முடிவெடுத்து, திமிர் வரி செலுத்த செய்தனர். அப்போதைய காலத்திலேயே 5 ரூபாய் முதல் 500 ரூபாய்கள் வரை 48 மணி நேரத்திற்குள் கட்ட வேண்டும் என அடித்து துன்புறுத்திய ஆங்கிலேயர்கள் கோவை மக்களிடம் வசூலித்துள்ளனர். இதே விடுதலை போராட்ட காலத்தில் ஆங்கிலேயரிடம் விடுதலை போராட்ட வீரர் களை காட்டிக் கொடுத்த வாஜ்பாய் போன்ற வர்களும், மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி, பிரிட்டீசாருக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதியளித்த சவார்க்கர் போன்றவர்கள் இருந்த இந்நாட்டில்தான், இறுதிவரை விடுத லைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுக்கா மல் கையிலும், காதிலும் போட்டிருந்த நகை களையும், வீட்டிலிருந்த பண்ட பாத்திரங்களை யும், தொழிலுக்கு பயன்பட்ட உபகரணங்களை யும் விற்று திமிர் வரி செலுத்திய கோவை மக்க ளின் திமிர்தனம் ஆங்கிலேயரை எதிர்த்த கோவை மக்களின் விடுதலை போராட்ட வர லாற்றில் தவிர்க்க முடியாத நிகழ்வாகும். அன்று விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று நாட்டை ஆள் கிறார்கள். உயிரே போனாலும் விடுதலை போராட்ட வீரர்களை காட்டிக்கொடுக்க மாட் டோம் என திமிர் வரி செலுத்திய மக்கள் இன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் விழி பிதுங்கிக்கிடக் கிறார்கள்.
வீரம் விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் வீறு கொண்டு எழுவார்கள், கழிசடைகளை புறம்தள்ளி களிப்புறுவார்கள்!.