districts

img

அரசு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வருக

சிபிஎம் ஆர்ப்பாட்டம் நாமக்கல், மே 12- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அமைக் கப்பட வேண்டும் என்ற நீண்ட கால மக்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவமனை கட்டி முடிக்கப்பட் டது. கடந்த ஆண்டு முதல் மருத்து வக்கல்லூரி செயல்பட துவங்கியுள் ளது. ஆனால், மருத்துவமனை இன் னும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இத னால் மாவட்ட மக்கள் அவசர மற் றும் உயர் சிகிச்சைக்கு சேலம், கரூர், கோவை என அருகாமை மாவட்டங்களுக்கு செல்கிற நிலை உள்ளது. பல நேரங்களில், உரிய  சிகிச்சையின்றி போகும் வழியி லேயே பல உயிரிழப்பு சம்பவங்க ளும் நடைபெற்றுள்ளது. மருத்துவமனை கட்டி முடிக்கப் பட்டு ஓராண்டாகியும் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வராமல் இருப் பதற்கு காரணமாக, தண்ணீர் வசதி இல்லை என்று சொல்லப்படுகிறது.  இந்த சொத்தையான காரணங்களி னால் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சிகிச் சைகள் கிடைக்கப்பெறாமல் உள் ளது. எனவே மாநில அரசு நாமக்கல் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைத்திடவும், வெளி  மாவட்டங்கள், வெளி மாநிலங்க ளுக்கு மக்கள் சென்று சிகிச்சை  பெற சிரமப்படுவதை தவிர்க்கவும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் வெள்ளி யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமை ஏற் றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி. பெருமாள், எம்.அசோகன் உள்ளிட் டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில், திரளானோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் பி.தங்கராஜ் நன்றி கூறினார்.