தருமபுரி, அக்.26- பாலக்கோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் விவ சாய விளை பொருட்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பகுதியாக பாலக்கோடு அமைந் துள்ளது. பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய் யப்படுகிறது. இதேபோல் பல் வேறு வகையான காய்கறிகளும் இந்த பகுதிகளில் விளைகின்றன. பாலக்கோடு வட்டாரத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 500 டன் முதல் அதிகபட்சமாக 800 டன் வரை தக்காளி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாக னங்களில் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தக்காளி அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் கணிசமாக அதிக ரிக்கும் போது விலை வீழ்ச்சி ஏற்படு கிறது. அத்தகைய நேரங்களில் தக்காளிக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைக்காததால் விவசாயி கள் கடும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், பாலக்கோடு பகுதியில் தக்காளி உள்ளிட்ட விவ சாய விளைப்பொருட்களை இருப்பு வைக்க குளிர் பதன கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை நிறை வேற்றும் வகையில், வேளாண் வணிகத்துறை மூலம் பாலக் கோட்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இங்கு தக்காளி, புளி, பிறவகை காய்கறிகள் ஆகிய வற்றை இருப்பு வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குளிர் பதன கிடங்கு கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த குளிர்பதன கிடங்கை விரைவாக திறக்க வேண்டும். மேலும் இந்த கிடங்கை விவசாயிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென மாவட்ட நிர்வாகத்தை விவசாயிகள் வலியுறுத்தியுள் ளனர்.