districts

img

காலை சிற்றுண்டி: இரண்டாம் கட்டம் துவக்கம்

கோவை, மார்ச் 1- கோவை, வரதராஜபுரம்  மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 62 மாநக ராட்சி பள்ளிகளில் பயிலும் 7,255 மாணாக் கர்களும், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதி களில் உள்ள 9 பள்ளிகளில் பயிலும் 1,119 மாணாக்கர்களும், மதுக்கரை நகராட்சி பகுதி களில் உள்ள 3 பள்ளிகளில் பயிலும் 730  மாணாக்கர்கள் என மொத்தம் 74 பள்ளிகளில்  9 ஆயிரத்து 104 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இத்திட்டத்தின் இரண் டாம் கட்டம் கோவை மாவட்டத்தில் புதனன்று  துவங்கப்பட்டுள்ளது. வரதராஜபுரம் மாநக ராட்சி ஆரம்பப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி இத்திட்டத்தை துவக்கி  வைத்தார். இதன்படி, கோவை மாநகராட்சி  59 பள்ளிகளில் பயிலும் 7961 மாணாக்கர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 2 பள்ளிகளில் பயிலும் 384 மாணாக் கர்கள், மதுக்கரை நகராட்சி பகுதிகளில் உள்ள 1 பள்ளியில் பயிலும்  222 மாணாக் கர்கள் என மொத்தம் 62 பள்ளிகளில் 8 ஆயி ரத்து 567 பேருக்கு காலை உணவு வழங்கப் படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 136 பள்ளிகளைச் சேர்ந்த 17,671 பேர் பயன டைகின்றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி  ஆணையர் மு.பிரதாப், கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், துணை ஆணையர் மோ.ஷர்மிளா, மாமன்றஉறுப்பினர் சிவா, பள்ளி தலைமை  ஆசிரியர் மீனாள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.