districts

ரயில்வே அச்சகத்தை பாதுகாப்போம்

கோவை, ஜூன் 3- ரயில்வே அச்சகத்தை மூட முயற்சிக்கும் ஒன்றிய மோடி அர சிற்கு எதிராக வலுவான போராட் டத்தை முன்னெடுத்து அச்சகத்தை பாதுகாப்போம் என டிஆர்இயு தலைவர்களிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., உறுதியளித்தார். இந்திய ரயில்வேக்கு சொந்த மாக நாட்டின் பல்வேறு பகுதி களில் ரயில்வே அச்சகங்கள்  உள்ளது. ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு, ரயில்வே அட்ட வணை, ரயில்வே அலுவல கங்களுக்கு தேவையான ரசீதுகள்  என பலவகைப்பட்ட அச்சுப் பணிகள் அங்கு நடைபெற்று வரு கிறது. தற்போது, ரயில்வே வாரியம்  5 அச்சகங்களை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இதில், சென்னை யில் உள்ள ராயபுரம் அச்சகமும்  மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அச்சகம் 1890 ஆம் ஆண்டு  துவங்கப்பட்டது. சொந்த கட்ட டத்தில் இயங்கி வருகிறது.  பல் வேறு காலகட்டங்களில் நவீனப் படுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம்   ஆண்டில் ரூ.15 கோடி மதிப்புள்ள  நவீன இயந்திரம் ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்டு,  இயந்திரம், தற்போதும் அங்கு செயல்பாட்டில்  உள்ளது.  இந்த அச்சகத்தில், ரயில்வே துறைக்கு மட்டுமல்லாது பிற பொதுத்துறை நிறுவனங்களின் அச்சுப் பணிகளையும் திறமையாக வும், குறைந்த செலவிலும் அச்ச டித்து தருவதற்கான வாய்ப்புள்ள நிறுவனமாக உள்ளது.

இதனை மூடி விட்டு அச்சுப்பணிகளை வெளி முகமை மூலம் செய்து  கொள்ள ரயில்வே வாரியம் திட்ட மிடப்பட்டுள்ளது. இது அச்சுப்பணி களுக்கான செலவினங்களைத்  தான் அதிகரிக்கும்.   ஆகவே,  அச்சகத்தை மூடுவ தாக ரயில்வே வாரியம் எடுத்த முடிவை திரும்பப் பெற  முயற்சி  எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களை  தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் (டிஆர் இயு) பொதுச் செயலாளர் ஹரி லால் மற்றும் நிர்வாகிகள்  சனியன்று  சந்தித்து மனு அளித்தனர்.  இந்திய நாட்டு பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் பங்கு களையும் விற்பதற்கென்ற ஒன்றிய மோடி அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பண மயமாக்கல் திட்டத்தின் கீழ் பல் வேறு பொதுத்துறை நிறுவனங் களின் சொத்துக்களை அடிமாட்டு  விலைக்கு விற்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறது. லட்சக் கணக்கான உழைப்பாளி மக்களின்  வியர்வையில் உருவான பொதுத் துறைகளை பாதுகாக்க மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கள் தொடர்ந்து போராடிக் கொண் டிருக்கிறோம். அது நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்தில் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறோம். மக்கள் சொத் தான ரயில்வே உள்ளிட்ட பொதுத்  துறைகளை பாதுகாப்பதில், ஒன்றி ணைந்து வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம், நான் எப் போதும் உங்களுடன் துணையாக இருப்பேன் என பி.ஆர்.நட ராஜன் எம்பி., உறுதியளித்தார்.