districts

img

மூலதனம் கற்க முடியுமா? நூல் வெளியீட்டு விழா

கோவை அக். 3- “கோவை மூலதனம் வாசிப்புக் குழு” சார்பில் மூலதனம் கற்க முடியுமா? என்ற நூல் வெளியீட்டு விழா புதனன்று நடை பெற்றது. மூலதனம் வாசிப்புக் குழுவின் ஓராண்டு நிறைவை யொட்டி, மூலதனம் கற்க முடியுமா? என்ற நூல்வெளியீட்டு  விழா கோவை மாவட்டம், திருச்சி சாலை யில் உள்ள சரோஜ் நிலையத்தில் புதனன்று நடைபெற்றது. நூல்வெளியீட்டு நிகழ்விற்கு, பெரோஸ் பாபு தலைமை வகித்தார். கல்பனா வரவேற்றார், இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியும், மூத்த வழக்கறிஞரு மான கே.சுப்ரமணியன், சிபிஐ எம்எல் மாவட்டச் செயலாளர் கே.பாலசுப்ரமணி யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கன கராஜ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று கருத்துரையாற்றினர். இதில்,  ஏராளமா னோர் கலந்தகொண்டனர். முடிவில், சதாசிவம் நன்றி கூறினார்