மேட்டுப்பாளையம், ஆக.30- மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் கலந்து கொண்டு உண்டியல் மூலம் சேமித்த தொகைக்கு புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் கடந்த ஆக.23 ஆம் தேதியன்று முதல் 4 ஆவது புத்த கத் திருவிழா மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பதிப்பகத்தாரின் 45 அரங்குகள், இலட்சக்கணக்கான புத்தகங்கள் என களைகட்டும் இப்புத்தகத் திரு விழாவில் தமிழகத்தின் தலை சிறந்த, அறிவார்ந்த பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள, விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொது மக்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப் பினரும் கலந்து கொண்டு புத்தகங் களை வாங்கி மகிழ்ந்து வருகின்ற னர். மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் படைப்புகள், நாட கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப் பாளையம் பகுதியில் உள்ள பல் வேறு பள்ளிகளில் மாணவர்க ளுக்கு புத்தக சேமிப்பு உண்டியல் கள் வழங்கப்பட்டன. உண்டியல் மூலம் சேமித்த தொகைக்கு மாண வர்கள் புத்தகங்கள் வாங்கி வரு கிறார்கள். பல்வேறு பள்ளி மாண வர்கள் நாள் தோறும் புத்தகத் திரு விழாவில் கலந்துகொண்டு சிறப் பித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று காரமடை ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உண்டியல் மூலம் சேமித்த தொகைக்கு புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் புனிதசெல்வி, ஆசிரியர்கள் உமா, அமலசிந்தியா ஆகியோர் மாணவர்களை அழைத்து வந்து அவர்களின் சேமிப்புத் தொகைக்கு புத்தகங் களை வாங்கிக் கொடுத்து புத்தகங் களின் சிறப்புகளையும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் புத்தகத் திருவிழா வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த புத்தக திருவிழா வருகின்ற செப்.1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.