திருப்பூர், ஜன. 4 - 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கான கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 26 இடங்களில்நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப் பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 20ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெ றுகிறது. ஆண்டுதோறும் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியரின் கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு மாணவ, மாணவிய ருக்கான கலை இலக்கிய திற னாய்வு போட்டிகள் வரும் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
போட்டி பிரிவுகள், தலைப்புகள்:
இதில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு, 6 முதல் 8ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் படுகின்றன. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவ மாணவியர் பங்கேற் கும் ஓவியப் போட்டிக்கு என்னு டைய வீடு, தேசத் தலைவர்கள், எனது வகுப்பறை, வனவிலங்கு கள் ஆகிய தலைப்புகளில் ஏதே னும் ஒரு தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஓவியப் போட்டிக்கு மழை வெள் ளம், சந்திராயன், பிடித்த விளை யாட்டு, பொங்கலோ பொங்கல் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரைய வேண் டும். இதே பிரிவில் கட்டுரைப் போட்டிக்கு குப்பையில்லா ஊர், பூமி பந்தை காப்போம், ஆண்ட் ராய்டு அரக்கன், வெற்றி தோல்வி என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பிரிவில் ஓவிய போட்டிக்கு, என்னை கவர்ந்த கேலிச்சித்திரம், குருவிக்கூடு, சிங்கப்பெண்ணே, பசுமை தேசம் ஆகிய தலைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்பிரிவில் கட்டுரைப் போட்டிக்கு சரித்திரம் தேர்ச்சி கொள், போரிடும் உலகத்தை வேரறுப்போம், இணையமும்; இன்றைய தலைமுறையும், உலகை உலுக்கும் காலநிலை மாற்றம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை எழுத வேண்டும். இதே பிரிவில் கவிதை போட் டிக்கு, போட்டி நடைபெறும் நாளில் அந்தந்த மையத்தில் காலை 10 மணி அளவில் கவிதை போட்டிகளுக்கான தலைப்பு வழங்கப்படும் என்று புத்தகத் திருவிழா குழுவினர் தெரிவித் துள்ளனர்.
விதிமுறைகள்
இப்போட்டிக்கு எழுத தேவை யான தாள்கள் மற்றும் படம் வரை வதற்கான சார்ட் ஆகியவை அங் கேயே தரப்படும். போட்டியின் போதுதான் எழுதி தர வேண்டும். குறிப்புகளையோ, ஏடுகளையோ பார்த்து எழுத கூடாது. கட்டுரை அதிகபட்சம் நான்கு பக்கம், கவிதை அதிகபட்சம் இரண்டு பக்கம் இருக்க வேண்டும். மாண வர்கள் தங்களது பெயர், வகுப்பு, பள்ளி தொலைபேசி எண் ஆகிய வற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. மாணவ, மாணவியர் காலை 9 மணிக்குள் போட்டி நடைபெறும் அரங்கில் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர் ஏதோ ஒரு மையத் தில் மட்டுமே பங்கேற்க வேண் டும்.
போட்டி நடைபெறும் இடங்கள் விபரம்:
திருப்பூர் வடக்குப் பகுதி யில் திருப்பூர் குமார் நகர் மேல்நி லைப் பள்ளி, என்ஆர்கே புரம் மேல்நிலைப் பள்ளி, நெசவாளர் காலனி உயர்நிலைப் பள்ளி, வாவிபாளையம் அரசு உயர்நி லைப்பள்ளி, பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாஸ்கோ நகர் உயர்நி லைப் பள்ளி, 15 வேலம்பாளை யம் நடுநிலைப் பள்ளி மற்றும் திருப்பூர் தெற்குப் பகுதியில் திருப்பூர் ஜெய்வாபாய் நக ரவைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நொய்யல் வீதி உயர் நிலைப் பள்ளி, வீரபாண்டி மேல் நிலைப் பள்ளி, இடுவம்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லூர் நடுநிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி, பெரிச்சிபாளை யம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 14 இடங்களில் போட்டி கள் நடைபெறும். இத்துடன் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொங்கலூர் பி.வி.கே.என் மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் பழைய கோட்டை ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, தாராபுரம் என்சிபி மேல்நிலைப்பள்ளி, வெள்ள கோயில் கரூர் ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூல னூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக் குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் இப் போட்டி கள் நடைபெறுகிறது. இப் போட்டியில் அந்தந்த மையங்களில் வெற்றி பெறுவோ ருக்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு 300, 3ஆம் பரிசு ரூ. 200 ரொக்கம் வழங்கப்படும். அத்துடன் நினைவு பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் பங் கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப் படும். இப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு ஜனவரி 30 ஆம் தேதி செவ்வாய் அன்று மாலை புத்தகத் திருவிழா வளா கத்தில் பரிசளிப்பு விழா நடை பெறும் என்று புத்தகத் திரு விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரி வித்துள்ளனர்.