பு.புளியம்பட்டியில் புத்தக திருவிழா
ஈரோடு, நவ. 4- ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. பெரியார், அண்ணா சிந்தனையாளர் பேரவை, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்தும் புத்தக திருவிழா 2022 புன்செய் புளியம்பட்டி கே.ஜி. மஹாலில் நடைபெற உள்ளது. இப்புத்தக திருவிழா வரும் 16 ஆம் தேதி தொடங்கு கிறது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறும். மாலை 6 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப் பட்டுள்ளது. 17ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற தலைப்பிலும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றுகின்றனர். இத்திருவிழா 20 ஆம் தேதியன்று நிறைவடையும் என்று சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் ப.மாரிமுத்து தெரிவித்தார்.
தொழிற்சங்க உரிமைகள் மீது தாக்குதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
சேலம், நவ.4- தொழிற்சங்க உரிமைகள் மீதான தாக்குதலை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் நவ.19 ஆம் தேதியன்று வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு விடுக் கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் தொழிற்சங்க உரிமைகள் மீதான தாக்குதல் களை கண்டித்தும், வேலை வாய்ப்பு மீதான தாக்குதல்களை கண்டித்தும், இருதரப்பு ஒப்பந்தம் தொழிலாளர் நல சட்ட விதி மீறல்கள் ஒப்பந்தங்களை மீறி வங்கி ஊழியர்கள் இடம் மாற்றம் செய்வதை கண்டித்தும் நவ.19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கல்யாணராமன், பொதுச் செயலாளர் எஸ்.சம்பத், உதவித்தலைவர்கள் எஸ். மீனாட்சி, விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரேசன் அரிசி பறிமுதல்
இளம்பிள்ளை, நவ.4- எடப்பாடி அருகே ஆயிரத்து 250 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் சி.பெரியசாமி தலை மையில் போலீசார், அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, வெள்ளாண்டிவலசு சக்தி தியேட்டர் அருகே புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 மூட்டைகளில் சுமார் 1250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சத்திவேல் (34) என்பவர், ரேசன் அரிசியை பொதுமக்களி டமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதை கள்ளச்சந்தை யில் விற்க முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சத்திவேல் மீது சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1250 கிலோ ரேசன் அரிசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொப்பரை தேங்காய் விற்பனை
ஈரோடு, நவ.4- கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 151 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசா யிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்த பட்ச விலையாக 76 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 78 ரூபாய் 29 காசுக்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 102-க்கு ஏலம் போனது.
வாலிபருக்கு கத்திக்குத்து: 4 பேர் கைது
சூலூர், நவ.4- கருமத்தம்பட்டி அருகே தொழில் பகையால் வாலி பரை கத்தியால் குத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கணியூர் கிராமத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவ னத்தில் ஒப்பந்த அடிப்ப டையில் ஆட்களை வைத்து வேலை செய்து வரும் ராஜேஷ் மற்றும் இளங் கோவன் ஆகிய இருவ ருக்கும் இடையே போட்டி யுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று இரவு கணியூர் சுங்கச்சாவடி அருகே கோவை பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனின் மகன் பிரித்திவிராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் பாலச் சந்திரன், வினோத் குமார் ஆகியோர் ராஜேஷிடம் வாக்குவாதம் செய்துள் ளனர். அப்போது பாலச் சந்திரன் மற்றும் வினோத் குமார் கையில் வைத்திருந்த கத்தியால் ராஜேசை தாக்கி யதில் தலை, கை மற்றும் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இதையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு மேற்படி சம் பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான இளங் கோவன், அவரது மகன் பிரித்திவிராஜ், அவரது நண்பர்கள் வினோத்குமார், பாலச்சந்திரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - 8 பேர் கைது
சூலூர், நவ.4- சூலூரில் இரு வேறு இடங்களில் தனி படை போலீசார் நடத்திய சோத னையில் 3 டன் குட்கா பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு பேருந்து, 5 கார் ஒரு ஆட் டோவை காவல்துறையினர் பறி முதல் செய்தனர் . கோவை மாவட்டம், சூலூர் தனிப் படை போலீசாருக்கு பெங்களூரில் இருந்து கேரளாவை நோக்கி வரும் ஆம்னி பேருந்தில் குட்கா பொருட் கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத் துள்ளது. இந்த தகவலையடுத்து நீலாம்பூர் அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த சொகுசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். ஆம்னி பேருந்தில் இருந்த ஓட்டுநர் முன்னுக் குப் பின் முரணாக பதில் அளித்துள் ளார். பின்னர் அந்த பேருந்தை சோத னையிட்ட காவல்துறையினர் டிரை வர் இருக்கைக்கு மேலே உள்ள சீட்டை சோதனை செய்துள்ளனர். அதில் குட்கா பொருள்கள் இருந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. பின்னர் பேருந்து முழுவ தும் சோதனை இட்டபோது பேருந் துக்கு பின்புறம் உள்ள எமர்ஜென்சி எக்ஸிட் ஜன்னல் ஓரத்தின் கீழ் உள்ள இருக்கையின் கீழ் புறத்தில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந் தது தெரிய வந்தது. பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பேருந்தில் மறைத்து வைத்திருந்த இரண்டு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து குட்கா பொருட்களை வாங்குவதற் காக இருந்த டீலர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் செந்தில்குமார், மொஹப் பாஷா, செந்தில் ராஜா, ஜெயபிர காஷ் கைது செய்தனர். இதைப்போலவே மைசூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து இங்குள்ள மயிலம்பட்டி பகுதியில் குடோனை வாடகைக்கு எடுத்து குக்கா பொருட்களை பெட்டிக்கடை கள் மற்றும் வட மாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக வந்த தக வலை எடுத்து குடோனில் சோதனை யிட்ட காவல் துறையினர் குடோனிலி ருந்து ஒன்றரை டன் குட்காவை பறி முதல் செய்தனர். பின்னர் குடோனில் தங்கி இருந்த பரத் பட்டேல் அமர ராம் கோபால் மற்றும் மைபால் ஆகிய 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல் பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய அழைப்பு
திருப்பூர், நவ.4 - திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் (சம்பா) பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நவ.15 ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் வட்டாரங்களில் சாகுபடி செய்யப் படும் நெல் பயிருக்கு, அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத் தில் காப்பீடுத்தொகையை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், நிலஉரிமை பட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 24 இல் ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்
திருப்பூர், நவ. 4 - திருப்பூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ஆசிரி யர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நவம்பர் 24 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர், சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் கலந்து கொள்கின்றனர். ஓய்வூதியர்கள் தங்கள் குறைகள் குறித்து எழுத்துப் பூர்வமான மனுவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் 641601 என்ற முக வரிக்கு நவ. 15 மாலைக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கலாம், மாநகராட்சி ஓய்வூதியர்கள் இக்கூட்டத்தில் பயனடைய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு நவ. 10ல் கோவையில் ஒதுக்கீடு
திருப்பூர், நவ. 4 – கோவையில் நவ.10 ஆம் தேதியன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீ்டு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப் பிரிவு பொன்னையராஜபுரம், உப்பிலிபாளையம் 272 அடுக்கு மாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு பகுதி 2 நிலை 2 மற்றும் நிலை 3, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் உடும லைப்பேட்டை திட்டங்களும் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்ற சுயநிதி திட்டங்களான கணபதி சுயநிதி திட்டங்கள் பகுதி, சிங்காநல்லூர் சுயநிதி திட்டம் அடுக்குமாடி குடியிருப் புகள், வீடுகள், மற்றும் மனைகளுக்கு அக். 5 முதல் 21ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்பு கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். இக்குலுக் கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறி யாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் தெரி வித்துள்ளார்.
நேரு பிறந்தநாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி
திருப்பூர், நவ. 4 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார் பில் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14 ஆம் தேதி யன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு, குழந் தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தி யின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகள் தரப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு, இந் திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்ட மைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்ச சீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப்புறா – நேரு ஆகிய தலைப்புகளில் ஒன்றில் பேச லாம். போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2ஆயிரம் என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
டெங்கு கொசு ஒழிப்பு ஆலோசனை
திருப்பூர், நவ. 4 - திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ந.தினேஷ் குமார் தலைமையில் வெள்ளியன்று மாந கராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் ர.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை மற்றும் மாநகராட்சி பிரிவு அலுவலர்களுடன் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழை காரண மாக பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்க ளால் பரவும் இதர நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
திருப்பூர், நவ. 11 - திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ‘சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்’ நடைபெற உள்ளன. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்க ளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகா தார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும், கால்நடை பராமரிப்புத் துறை யின் மூலம் நடத்தப்படவுள்ளது.
முறைகேடான குடிநீர் இணைப்பு: காவல் நிலையத்தில் புகார்
அவிநாசி, நவ.4- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நக ராட்சியில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கிய நபர் மீது, நகராட்சி நிர்வாகம் திரு முருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவிநாசி ஒன்றியம் திருமுருகன் பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் முறைகேடான குடிநீர் வழங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி நடுவர் மன்றத் தில் மனு அளித்தது. இதன் மீது உள்ளாட்சி நடு வர் மன்றம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தனர். இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன் பத்திரிகையாளர் சந்தித்து முறை கேடான குடிநீர் இணைப்பு குறித்து உள் ளாட்சி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதை சுட்டிகாட்டினார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கிய முருகேசன் என்பவர் மீது புகார் அளித்துள் ளனர். இருப்பினும் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் இருந்து எந்தவித நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தெருவிளக்குகள் அமைக்க ரூ.70 லட்சம் ஒதுக்கீடு
தாராபுரம், நவ.4 - தாராபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க ரூ.70 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர கிராம சபை கூட்டம் 9 ஆவது வார்டு சொக்க நாதபாளையத்தில் நகராட்சி தலைவர் கு. பாப்புகண்ணன் தலைமையில் நடைபெற் றது. நகராட்சி ஆணையாளர் ராமர் முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 9 ஆவது வார்டு நகராட்சி கவுன்சிலர் முத்துலட்சுமி பழனிசாமி சாக் கடை வசதி, தெருவிளக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட வார்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண் டும் என வலியுறுத்தினார். அதேபோல அப்ப குதியில் முழுமையான சாக்கடை, மழை நீர் வடிகால் மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து நகராட்சி தலை வரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நகராட்சி தலைவர் கு. பாப்பு கண்ணன் கூறியதாவது, சொக்கநாத பாளையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதி மக் களின் அடிப்படை தேவைகளான மழைநீர் வடிகால், சாக்கடை வசதி, தெருவிளக்கு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தாரா புரம் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க ரூ 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள் ளது என கூறினார். இதைதொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி வழங்கிய காசோ லையை வழங்கினார். இக்கூட்டத்தில் 9 ஆவது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி பழனி சாமி, வார்டு செயலாளர் மயில்சாமி, ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில் ஆணையாளர் ராமர் பொதுமக் களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண் டார்.
நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
உதகை, நவ.4- உதகை அருகே வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளது. இதனால் அச்சம டைந்துள்ள அப்பகுதி மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இதனால், அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் அருகே உலா வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. கடந்த அக்.28 ஆம் தேதி இரவு உதகை சாலையில் சிறுத்தை ஒன்று நடந்து சென்ற காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சிறுத்தை ஜூலை மாத மும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இந்நிலை யில், வெள்ளியன்று அதிகாலை உதகை சாலையில் வெஸ் டோடா பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வராண்டா பகுதியிலிருந்த வளர்ப்பு நாயை தூக்கிச்சென்றது. இதைத்தொடர்ந்து நாய் சத்தம் கேட்டதால் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த குடியிருப்புவாசிகள் நாயை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அப்போது வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில், சிறுத்தை ஒன்று நாயை தூக்கி சென்றது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வருகிறது. இதை பலர் நேரிலும், சிலர் கண்காணிப்பு கேமரா பதிவிலும் பார்த்துள்ளனர். ஆனாலும், சிறுத்தையை பிடிக்க வனத்துறை யினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல் 2 நாட்களுக்கு முன்பு எச்பிஎப் பகுதியில் புலி ஒன்று புகுந்து, பசு மாட்டை வேட்டையாடி சென்றுள்ளது. இதனால் எங்களுக்கு பயமாக உள்ளது, என்றனர். இந்நிலையில், வனத்துறையினர் மாட்டை கொன்ற புலி யின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கா ணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக வும், அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாக இருக்கு மாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
லஞ்சம் வாங்கிய சர்வே துணை ஆய்வாளர் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கோவை, நவ.4- நிலத்தை உட்பிரிவு செய்து வரைபடம் வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவை துறை துணை ஆய்வாளருக்கு 3 வருட சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப் பளித்துள்ளது. கோவை குன்னத்தூர், புதூரில் வசித்து வந்தவர் மகேந்திர பிரபு. இவர் கடந்த 2012ம் ஆண்டு தன்னுடைய தந்தை நிலத் தினை உட்பிரிவு செய்து வரைபடம் கேட்டு கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பெற்ற முன்னாள் நில அளவை துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றிய பொன்னுசாமி தனக்கு ரூ15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரபிரபு கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பொன்னுசாமி மீது புகார் அளித்தார். இதன் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள் ரசா யனம் தடவிய ரூபாய் தாள்களை அளித்து புகார்தாரரிட மிருந்து லஞ்ச பணமான ரூ.15,000/-யை பெற்ற போது கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு கோவை மாவட்டம் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று வழங்கப்பட்டது. இதில், கோவை வடக்கு தாலுகா நில அளவை துறை முன்னாள் துணை ஆய்வாளர் பொன்னுசாமி ரூ15 ஆயிரம் லஞ்சம் கேட்ட குற்றத்திற்கு 3 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், புகார்தாரரிடமிருந்து லஞ்ச பணம் பெற்றதற்கு 3 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இத்தண்டணைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: புதுப்பிட மக்கள் வலியுறுத்தல்
தருமபுரி, நவ.4- கெண்டிகான அள்ளி பட்டகப்பட்டி காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், கெண்டி கான அள்ளி ஊராட்சிக்குபட்டது பட்டகப்பட்டி. இங்கு ஆதி திராவிடர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நிலமற்ற, கூலி வேலை செய்யும் விவசாயிகள். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் ஆதிதிராவி டர் மக்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட் டது. ஆனால் இதுவரை வீடுகளுக்கு பட்டா கொடுக்கப்பட வில்லை. தற்போது அந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல் விட்டு எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது பலருக்கு வீடு இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும் பங்களாக சேர்ந்து வசித்துவரும் அவலநிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை யும் இல்லை. எனவே, பட்டகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி சேர்ந்தவர்க ளுக்கு வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டி தரவேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இக்கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு இம்மக்கள் உள்ளனர்.
தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல், நவ.4- பரமத்திவேலூர் அருகே உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 659 கிலோ தேங் காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.99க்கும், குறைந்த பட்சமாக ரூ.58.99க்கும், சரா சரியாக ரூ.81.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட் சத்து 90 ஆயிரத்து 790க்கு ஏலம் நடைபெற்றது.
மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்
சேலம், நவ.4- வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளில் யாரும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மழையின் போது ஏற்படுகின்ற புயல் காற்று, வெள்ளம் காரணமாக மின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மழைக்காலத்தின் போது ட்ரான்ஸ்பார்மர்கள், மின்கம்பம், மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றின் அருகில் யாரும் செல்ல வேண்டாம். மழை யாலும், பெருங்காற்றாலும் அருந்து விழுந்த மின் கம்பிகள் அருகே செல்லாமல் உடனடியாக அருகே உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய ஊழியர்களை அணுக வேண்டும். மேலும், சேலம் மின் பகிர்மான வட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், அவசர கால பேரிடர் மையத்தை 9445060629 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பால சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை, நவ.4- கோவை மாநகராட்சி, 100 ஆவது வார்டுக்குட்பட்ட மேட்டூர், ஆடிட்டர் வீதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாநக ராட்சி ஆணையாளர் மு.பிர தாப் நேரில் சென்று பார்வை யிட்டார். மேலும், பணி களை விரைவாகவும், தர மாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிட் டார். இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், செந்தில்குமார், பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை
சூலூர், நவ.4- சோமனுர் பேருந்து நிலைய விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என, அந்த விபத் தில் பாதிக்கப்பட்டு அரசு வேலை கிடைக்க பெற்ற பெண் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மாநில பேரிட மேலாண்மை நிவாரண நிதி யிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம், இச்சிப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள் லதா வும் பாதிக்கப்பட்டார். விபத்து நடந்த காலத் தில் அவர் கோவையில் உள்ள தனியார் கல் லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், விபத் தில் பாதிக்கப்பட்ட லதாவின் எதிர்கால நலன் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டது. இதை யேற்று உதவியாளர் பணியிடத்திற்கு தேவை யான குறைந்தபட்ச கல்வி தகுதி பெற்றுள்ள தால் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள் ளது. அதற்கான பணி நியமன ஆணை லதா விடம் வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்ற லதாவை திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார். மேலும், இதற்காக பாடுபட்ட சமூக ஆர்வ லர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதன்பின் லதா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நடை பெற்ற பேருந்து இடிந்து விழுந்த சம்பவத்தில் மாட்டிக் கொண்டு ஒரு கால் இல்லாமல் போனது. மருத்துவர்கள் கால்கள் செயல் படாது என்று கூறிய நிலையில் ஒரு கால் களுடன் இருந்து வருகிறேன். பின்னர் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். 4 ஆண்டுகள் முயற்சிக்கு பின் முதல்வர் ஸ்டா லின் தற்போது அரசு வேலைக்கு பணி நிய மனம் செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து முதல்வர் பாடுபட்டு வருகிறார். தன்னை போன்று விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு வேலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.