districts

img

உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை

கோவை, டிச.26- கோவையில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப் புகள் தானம் வழங்க குடும்பத்தி னர் ஒப்புதல் வழங்கினர். இத னைத்தொடர்ந்து இறந்தவர் உட லுக்கு அரசு மருத்துவமனை சார் பில் அரசு மரியாதை செய்யப் பட்டது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காரச்சேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (40) கார் ஓட்டுநர். இவர் கடந்த ஞாயிறன்று செட்டி பாளையத்தில் இருந்து இரு சக்கர வாக னத்தில் சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு, நேர் மோதி விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காய மடைந்த அவர் கோவை சுந்தராபுரம் தனி யார் மருத்துவமனையில்  அனு மதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந் தார். இந்நிலையில் தங்கராஜ் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதனால், தங்கராஜ் இருதயம், சிறுநீரகம், கல்லீரல், தானமாக வழங்க குடும் பத்தினர் ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து அவரது இருதயம் சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கும், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கோவை, ஈரோடுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்புகளை  ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல ஏதுவாக  போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மாந கர போலீசார் மேற்கொண்டனர். தங்கராஜ்  உடலுக்கு அரசு மருத்துவமனை சார்பில்  அரசு மரியாதை செலுத்தப்பட்டது.