திருப்பூர், பிப்.29- திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத் தில் படகு இல்லம் அமைய உள்ள இடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோ சனை நடத்தினார். திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிப்பாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார் பில் ஆண்டிப்பாளையம் ஏரியினை சுற் றுலாத் தலமாக மேம்படுத்தி படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மடம் அமைப்ப தற்கு கடந்த 2022 - 23 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்து 2023 ஏப்ரல் மாதம் முதல் பணிகள் நடை பெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் பணிகள் முடிந்த பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், வியாழனன்று அப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருப்பூர் போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சுற்றுலா வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆண்டிப்பாளையம் குளம் தேர்வு செய் யப்பட்டு சுற்றுலாத் தலமாக மேம்படுத் தும் பணி நடைபெற்று வருகிறது. முதற் கட்டமாக 20 படகுகளுடன் படகு இல்லம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அதற்கு தரும் வரவேற்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும். மேலும் ஆண்டிப் பாளையம் குளம் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் போது அதிக மக்கள் இதனை பயன்படுத்த தொடங்கு வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு முதலமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் படும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுற் றுலா அலுவலர் அரவிந்தகுமார், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளர் குணசேக ரன், திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு சங்கத் தலைவர் குளோபல் பூபதி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.