districts

img

கடம்பூரை மையப்படுத்தி உண்டு உறைவிடப் பள்ளி

ஈரோடு, ஜூலை 30- கடம்பூரை மையப்படுத்தி உண்டு  உறைவிடப் பள்ளி அமைக்க வேண் டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின், சத்தி மலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டத்தில், தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் சத்தி மலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாயன்று பசுவனாபுரத்தில் நடைபெற்றது. இப் பேரவை கூட்டத்திற்கு, மலை வட்டா ரக்கமிட்டித் தலைவர் பி.தங்கவேலு தலைமை வகித்தார். சங்கத்தின் மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு, மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி, மலை வட்டார கமிட்டி சிபிஎம் செயலாளர் சி.துரைசாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இதில், வன உரிமை சட்டம் 2006 ஐ  அமலாக்க வேண்டும். ஈரோடு மாவட்ட மலையாளிகளுக்கு பழங் குடி சான்று வழங்க வேண்டும். கெம் பநாயக்கன் பாளையத்திலிருந்து கடம்பூர் வரையுள்ள சாலையை அக லப்படுத்த வேண்டும். வன விலங்கு கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரா மல் தடுக்க வனத்துறை மூலம் குடிநீர்  வசதி செய்து கொடுக்க வேண்டும்.  திங்களூர் துணை சுகாதார நிலை யத்தில் மருத்துவர், செவிலியர் தங்கி  பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாக்கம்பாளையம், உகு னியம், நகலூர் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண் டும். கடம்பூரை மையப்படுத்தி உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தில், மலை வட் டார கமிட்டியின் புதிய தலைவராக தங்கவேல், செயலாளராக சின்ன சாமி, பொருளாளராக சடையப்பன் உள்ளிட்ட 21 பேர் கொண்ட கமிட்டி  தேர்வு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, இப்பேர வையில் 23 தீக்கதிர் சந்தாக்களுக் கான தொகை ரூ.38 ஆயிரத்து 400  ரூபாயை தலைவர்களிடம் வழங்கி னர்.