கோவை, நவ. 29 - சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது. இதனை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். டாஸ்மாக் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பணியில் சேர்ந்த 20 ஆவது ஆண்டு துவக்கத்தையொட்டி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில், ரத்த தான முகாம் கோவை இஎஸ்ஐ மருத்து வமனையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஜான்அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.செந்தில்பிரபு, கே.தங்கராஜ் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார். முகாமை வாழ்த்தி, இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்து வமனை முதல்வர் எம்.ரவீந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இம்முகாமில் ஏராள மான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்று ரத்தம் வழங்கினர்.