districts

img

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரத்ததான முகாம்

ஈரோடு, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரத்ததான நிகழ்ச்சி  நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பி.சுந்தர ராஜன் தலைமை வகித்தார். நகரக்குழு உறுப்பினர் பொன். பாரதி வரவேற்றார். ரத்த வங்கி மருத்துவர் சசிகலா, ‘குருதி கொடை செய்வோம்’ என்ற தலைப்பில் பேசுகையில், 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் எனக் குறிப்பிட்டார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வாழ்த்தி பேசினார். நகரக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ரவி, வி.பாண்டி யன் மற்றும் ஆர்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், சூரம்பட்டி கிளை நிர்வாகி எஸ்.தமிழரசன் நன்றி கூறினார். இம்முகாமில் 27 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.