ஈரோடு, பிப். 18- சிவகிரி பேரூராட்சியில் சாக்கடை அமைக்கும் பணியை திமுகவினர் தடுப் பதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் செவ் வாயன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூ ராட்சியில் விஐபி நகரிலிருந்து நெசவா ளர் காலனி வழியாக பாலமேட்டுப் புதூர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் சாக்கடை அமைக்க கடந்த 31 ஆம் தேதி யன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பணி கள் தொடங்குவதற்கு முன்பு விஐபி நகர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் தங்கள் வீடு இருக்கும் பகுதியில் சாக் கடை அமைக்க கூடாது என்று ஆட்சே பனை செய்துள்ளதாகக் கூறப்படுகி றது. இதனால், சாக்கடை அமைக் கும் பணி பாதிக் கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டபடி சாக் கடை அமைக்க வேண்டும் என்று தன்னெழுச்சியாக சிவகிரி பேரூ ராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.சசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைய டுத்து, செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சித் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டமிட்டபடி சாக்கடை அமைக்கப்படும் என உறுதியளித்த னர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.