கோவை, ஆக. 14- பீளமேட்டில் உள்ள எப்சிஐ (இந் திய உணவு கழக கிடங்கு)கிற்கு செல் லும் சக்தி சாலையில், எப்சிஐ நிறுவ னத்தினர் நுழைவு வாயில் கதவை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஆண் டாண்டு காலமாக இச்சாலையை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். உடனடி யாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்க வேண்டும் என கோவை மாந கராட்சியின் சம்மந்தப்பட்ட பகுதி யில் உள்ள மூன்று மாமன்ற உறுப்பி னர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மனு அளித்தனர். காந்திமாநகர், பீளமேடு, ஆவா ரம்பாளையம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் குடியிருப்புகளிலி ருந்து அவினாசி பிரதான சாலை, சக்தி பிரதான சாலைக்கு செல்ல எப்சிஐ சாலையை பயன்படுத்தி வரு கின்றனர். இந்நிலையில், அங்கு புதி தாக சாலை அமைக்கும் பனியினை எப்சிஐ நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும், நுழைவுப்பகுதியில் வாயிற் கதவை அமைக்க திட்டமிடப்பள் டுள்ளது. இப்பணியை மேற்கொண் டால், குறிப்பிட்ட பகுதியை சார்ந்த மக்கள் பகுதியை கடந்து செல்ல சுமார் 6 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல நேரிடும். மக்கள் பெரும் சிர மத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதையடுத்து, கோவை மாந கராட்சியின் 20,26,28 வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் இப் பகுதியில் வாயிற் கதவை எப்சிஐ நிறு வனம் அமைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இதன்தொடர்ச்சியாக திங்க ளன்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வினை அளித்தனர். இதுகுறித்து, கோவை மாந கராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற் றும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தும் சாலையை கதவை அமைத்து அடைத்து விடக்கூடாது. இது தனியார் நிறுவனம் அல்ல, அர சின் பொதுத்துறை நிறுவனம்தான். ஆகவே இந்த வழியை அடைக்ககூ டாது. மீறி அடைக்கும் முயற்சியில் ஈடு பட்டால் மக்களை திரட்டி போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் இயக்கத்தில், மாமன்ற உறுப்பினர் கள் மரியராஜ், சித்ரா வெள்ளிங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.