districts

img

தலைவரின் மகன் அதிகாரம் செலுத்துவதா?

திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி  ஒன்றியம் பழையகோட்டை கிராம ஊராட் சிக்கு உட்பட்ட குட்டப்பாளையத்தில் ஊராட் சிமன்றத் தலைவரின் மகன் அதிகாரம் செலுத்தி அத்துமீறலில் ஈடுபடுவதைக் கண் டித்து ஊர் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி  ஏற்றிப் போராட்டம் நடத்தினர். பழையகோட்டை ஊராட்சிமன்றத் தலை வராக இருப்பவர் மீனாட்சி. இவர் அதி முகவை சேர்ந்தவர். இவரது மகன் சண்முக சேகரன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலை வராக செயல்பட்டிருக்கிறார். தற்போது தனது அம்மா ஊராட்சி மன்றத் தலைவ ராக இருக்கும் நிலையில், இவரே எல்லா  வகையான ஊராட்சி நிர்வாக நடவடிக்கை களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகி றது. இந்நிலையில் பழையகோட்டை ஊராட் சிக்கு உட்பட்ட குட்டப்பாளையம் கிராமத்தில்  கடைவீதி பகுதியில் 16 வீடுகள் உள்ளன. இங்கு குறிப்பிட்ட மூவரின் வீடுகளைக் குறி வைத்து, கடந்த சனிக்கிழமை மாலை ஊராட்சி பணியாளரை அனுப்பி அந்த வீடுக ளின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க சொல்லி உள்ளனர். எவ்வித விதிமீறலும் இல் லாத நிலையில், ஊராட்சித் தலைவரின் மகன்  சண்முகசேகரன் தூண்டுதலில் குடிநீர் குழா யைத் துண்டிக்கும் நடவடிக்கைக்கு பணியா ளர் வந்ததாக இப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்தது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து  குழாய் இணைப்பு துண்டிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கண்ட பகுதி வீடுகளுக்கு குடிநீர் விநி யோகம் ஆகக்கூடிய மேல்நிலை நீர்த் தேக்கத்  தொட்டியில் இருந்து வரக்கூடிய பிரதான குடி நீர் விநியோகக் குழாயைத் துண்டித்து வீடுக ளுக்கு குடிநீர் வராதபடி தடை செய்துள்ள னர். அத்துடன் மேல்நிலைத் தொட்டி அருகி லேயே குழாய் அமைத்து அங்கு வந்து குடி நீர் பெற்றுச் செல்லும்படியும் கூறியுள்ளனர். ஊராட்சித் தலைவரின் மகன் மேற் கொண்ட இந்த அத்துமீறல் நடவடிக்கை  அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை யும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதை யடுத்து புதன்கிழமை, ஊராட்சி நிர்வாகத் தில் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன் சட் டத்துக்கு விரோதமாக அதிகாரம் செலுத்து வதைக் கண்டித்தும், அவர் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் குட்டப்பாளையம் கிராமத் தில் உள்ள வீடுகளில் அதிகாலை 5.30 மணி யளவில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக சட்டத்துக்குப் புறம்பாக வீடுக ளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட் டது குறித்து அப்பகுதி மக்கள், திமுக குட்டப் பாளையம் கிளைச் செயலாளர் சண்முகசுந் தரம் தலைமையில் ஊராட்சி ஒன்றியம் மற் றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.  இதையடுத்து குழாய் துண்டிப்பு நடவ டிக்கை நீக்கப்பட்டு, அனைத்து வீடுகளுக் கும் ஏற்கெனவே இருந்தபடி வீட்டுக் குடிநீர் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டன. எனினும் கடந்த மூன்றாண்டு காலமாக பழையகோட்டை ஊராட்சி நிர்வாகத்தில் அத் துமீறி தலையிட்டு வரும் ஊராட்சி தலைவர்  மீனாட்சியின் மகன் சண்முக சேகரன் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்ட தாக இந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.