கோவை, டிச.14- கோவை வந்த ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத் தில் ஈடுபட்டனர். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவில் இருந்து 7 மாதங்களுக்கு பின்பு சனியன்று கோவை திரும்பினார். இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவை விமான நிலைய இணைப்பு சாலை அருகே கையில் கருப் புக் கொடிகளுடன் அனைத்து முற் போக்கு இயக்கங்கள் சார்பில் போராட் டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஏரா ளமானோர் கையில் கருப்பு கொடிக ளுடனும், கையில் பதாகைகளை ஏந்தி யபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஈஷா கோவையின் அவ மானம், மர்மதேசம் எனவும், ஈஷா மீதான புகார்களை விசாரிக்க வேண் டும், ஈஷா மையத்தை மூட வேண்டும். மேலும், ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவக்கு எதிராகவும், ஈசா யோகா மையத்திற்கு எதிராகவும், ஈஷா யோகா மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ சந்தேகத்திற்குரிய வகைகள் உயிரிழந்ததற்கு நியாயம் கேட்கும் வகையிலும், ஜக்கியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றும் வரை ஓய மாட்டோம் எனவும் அவர்கள் முழக்கங் களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற் பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தால் விமான நிலையத்திலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் சிறிது நேரம் பர பரப்பான சூழல் நிலவியது.