districts

img

மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக தோற்பது உறுதி பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேச்சு

திருப்பூர், மார்ச் 12 - தேர்தல் பத்திர விபரங் களை எஸ்பிஐ சமர்ப்பிக்க  வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலை யில், மக்கள் கவனத்தை திசை திருப்ப குடியுரிமை திருத்தச் சட்டத்தை அம லுக்கு கொண்டு வருவதாக  பிரதமர் மோடி கூறியிருக்கி றார். மக்களைப் பிளவுபடுத்தும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற் பது உறுதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பல்லடம் தொகுதி வாக்குச்சா வடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்  ஆகியோர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அரசியல் முக்கியத்துவத்தை விளக்கி பேசினர். அப்போது பி.ஆர்.நடரா ஜன் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சி மகத் தான கட்சி. பல்வேறு வழக்குகளில் பாஜக நீதி மன்றத்தில் சாதகமாக தீர்ப்பைப் பெற முடிந் தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த  தேர்தல் பத்திர வழக்கில்தான் அவர்கள் தோற்றுள்ளனர். உச்சநீதிமன்ற அரசியல்  சட்ட அமர்வு, தேர்தல் பத்திர விவகாரத்தில்  எஸ்.பி.ஐ. 12ஆம் தேதிக்குள் விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள் ளது. இப்பிரச்சனையில் மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்குத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறி யுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைவது உறுதி என்று கூறினார். மேலும் இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், ஆர். குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி, பொங்கலூர்  ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன் ஆகியோர்  உரையாற்றினர். பல்லடம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னணி ஊழியர்கள் பெருந்திரளா னோர் பங்கேற்றனர்.