districts

img

மசூதிகளை இடித்து, ராமர் கோவில் மூலம் ஓட்டு கேட்கும் பாஜக

தருமபுரி, மார்ச் 3- மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வராமல், மசூதியை இடித்து கட்டிய ராமர் கோவில் மூலம் ஓட்டு கேட்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளதென தருமபுரியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் சாடி யுள்ளார். தருமபுரி பெரியார் மன்றத்தில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம், கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், பாஜக கூட்ட ணியை ஏன் வீழ்த்த வேண்டுமென்றால், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை நாசப் படுத்தி விட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடித்து, ராமர் கோவில் கட்டியுள்ளனர். வார ணாசி, மதுராவில் மசூதியை இடிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். 10 ஆண்டு களில் மக்களுக்கு எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. மசூதி, தேவாலயங்களை இடிப் பதையே வேலையாக வைத்துள்ளனர். இந்து  கோவில், மசூதி, தேவாலயங்கள் கட்டுவது அவ ரவர் விருப்பம்; உரிமை. இங்கு எல்லா மதத் தினரும் சகோதரத்துவமாக பழகுகிறார்கள்.  ஆனால், பாஜகவினர் இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் இந்த நாட்டின் எதிரிகளாக சித்தரித்து, இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க முயல்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வதாக சொன்னார்கள். கடன் தள்ளுபடி, விவ சாயிகள் தற்கொலையில் இருந்து மீட்பது என்று சொன்னவர்கள் எதையும் செய்யவில்லை. மாறாக, அதானி, அம்பானியின் 15 லட்சம் கோடி ரூபாயை கடனை தள்ளுபடி செய்துள்ள னர். பெரும் முதலாளிகளின் கடனை மோடி அரசு கட்டுகிறது. ஜிஎஸ்டி என்ற பெயரில் வசூ லிக்கும் பணம் முதலாளிகளின் கடனை அடைக் கிறது. இந்த வரிப்பணம் கல்வி, மருத்துவம், பெண்கள் மேம்பாட்டுக்கு செலவிடவில்லை. கடனை கட்டிய ரூ.15 லட்சம் கோடியை மக்க ளுக்கு ஒதுக்கியிருந்தால் இந்தியா முழுவதும் குடிசை வீடு இல்லாமல், கான்கிரீட் வீடு கட்டி யிருக்க முடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கேட்டு, தில்லியில் விவ சாயிகள் போராடி வருகின்றனர். தில்லிக்கு  செல்லும் சாலையில் அரசே குழி வெட்டுகிறது; ஆணியை பதிக்கிறது. இதையும் மீறி வரும் விவ சாயிகளை துப்பாக்கியால் சுடுகின்றனர். இதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். துப்பாக்கியால் பலர் பார்வையிழந்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கைக்காக தில்லியை நோக்கி செல்கின்ற னர். ஆனால், பிரதமர் மோடி மற்ற மாநிலங்க ளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தியாவில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீக்கிவிட்டு, வர்ணாசிரம மநு சட்டமுறையை கொண்டு வர ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையை மாற்றி, சாதி ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும் என நினைக்கின் றனர். ஆண்களுக்கு பெண்கள் எப்போதும் அடி மையாக இருக்கவேண்டும் மநுதர்ம சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஆர்எஸ்எஸ் - பாஜகவை தோற்கடிக்க வேண்டிய கடமை இந்திய மக்க ளுக்கு உள்ளது.

10 ஆண்டுகாலம் மக்களுக்கு எதையும் செய் யாத மோடி அரசு, ராமர் கோவிலை கட்டி, ராமரை ஓட்டுகேட்க வைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. கடந்த 7 மாதமாக இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 30 ஆயிரம் பேர் வரை  இறந்துள்ளனர். இதில் 20 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். திட்டமிட்டு குழந்தைகளை கொன்று குவிக்கின்றனர். இந்த தாக்குதலை உலக நாடு கள் கண்டிக்கிறது. ஆனால், மோடி அரசு இஸ் ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. குடியரசு தினவிழா வில் இஸ்ரேல் பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தியா முழுவதும் பாஜக விற்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக உள் ளது. எனவே, மதவாத - சாதியக் கூட்டணி பாஜக - அதிமுகவை தமிழ்நாட்டில் டெபாசிட் இழக்க  செய்ய வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ் ணன் பேசினார். இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப் பினர்கள் பி.டில்லிபாபு, இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி. மாதன், எம்.முத்து, சி.நாகராசன், சோ.அருச்சு ணன், வே.விசுவநாதன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஆர்.மல்லிகா, தி.வ. தனுசன், இடைகமிட்டிச் செயலாளர்கள் என்.கந்த சாமி, டி.எஸ்.ராமச்சந்திரன், சி.முரளி, சி.சக்தி வேல், என்.பி.முருகன், பி.ஜெயராமன், பி.குமார், கே.தங்கராசு, எஸ்.எஸ்.சின்னராசு, எம்.ராஜா, ஆர்.வெங்கடாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.