பெண் ஊழியர்களை மிரட்டி பாஜக பிரமுகர் அநாகரீகம்
கோவை, செப். 14- சிமென்ட் கடையின் கதவை அடைத்து அங்கு பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் களை தகாத வார்த்தைகளால் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை, பேரூரில் இருந்து வேடப் பட்டி செல்லும் சாலையில் சிமென்ட் கடை நடத்தி வருபவர் கணேஷ்குமார். கணேஷ் குமாருக்கு சென்னையிலும் சிமென்ட் கடை உள்ளது. இவரது மனைவி மைதிலி. இவர், கோவை வேடப்பட்டி செல்லும் சாலையிலுள்ள தங்களது சிமென்ட் கடையில் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த கடையில் இருந்து தூசிகள் அருகே உள்ள கடைகளுக்கும் மற்றும் குடி யிருப்பு வீடுகளுக்கும் செல்லுவதாகக் கூறி கடந்த சில மாதங்களாக அப்பகு தியைச் சேர்ந்த வேடப்பட்டி பாஜக மண்டலத் தலைவர் கார்த்திகேயன் தக ராறு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி யன்று அந்த சிமென்ட் கடையில் கணேஷ் குமாரின் மனைவி மைதிலி மற்றும் பெண் ஊழியர்கள் பலர் பணியில் இருந்த போது அங்கு வந்த ஏழுக்கும் மேற்பட்டோர் கடையின் ஷட்டரை அடைத்து, அங்கு இருந்த ஊழியர் களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மைதிலி தொண்டாமுத் தூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அந்த புகாரின் பேரில் பாஜக மண்ட லத் தலைவர் கார்த்திகேயன், ரம்யா, சுசிலா, பிரபு, சுரேஷ், சூரியா, பாலா மற் றும் அடையளாம் தெரிந்த சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை யில் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள் ளது.
சார்பு நீதிமன்ற இடத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி!
நாமக்கல், செப்.14- நாமக்கல் மாவட்டத்தில் சார்பு நீதி மன்ற கட்டடம் அமைக்க நகராட்சிக்கு சொந்தமான நடராஜா திருமண மண்ட பத்தையும் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி வெள்ளியன்று நேரில் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் புதிய தாலுகாவாக 2020, ஜூலை 18 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாடகை கட்டடத்தில் நீதிமன்றம் துவக்கப்பட் டது. இதில் மாவட்ட குற்றவியல் நீதி மன்றம், மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் செயல்பட்டு வருகிறது. சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக இடம் தேடி வந்தனர். குமாரபாளையம் தற்காலிக தாலுகா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்ட பத்தில் செயல்பட்டு வந்தது. புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது அண்ணா திருமண மண்டபம் காலியாக உள்ளது. ஆகவே, சார்பு நீதிமன்ற கட்ட டம் அமைக்க இந்த மண்டபத்தையும், நகராட்சிக்கு சொந்தமான நடராஜா திரு மண மண்டபத்தையும் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி பார்வையிட்டார். இதில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி, குமாரபாளையம் வழக் கறிஞர்கள் சங்க தலைவர் சரவணரா ஜன், செயலாளர் நடராஜன், பொருளா ளர் நாகப்பன், துணைச்செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
கோவை, செப்.14- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நடை பெற்ற தேர்வில், கோவை மாவட்டத்தில் 113 மையங்களில் 22380 தேர்வு எழுதினர். டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு சனியன்று நடைபெற்றது. கோவையில் 113 தேர்வு மையங்க ளில் 33,490 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 22,380 பேர் தேர்வு எழுதினர். 11058 பேர் விண்ணப்பித்தும் தேர்வு எழுத வர வில்லை. இந்நிலையில், காலை 8.30 மணிக்குத் தேர்வு மையத் திற்கு வந்து விட வேண்டும் என்றும், காலை 9 மணிக்குப் பிறகு வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என்றும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனி டையே மணிக்கூண்டு, தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளி யில் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் 2 நிமிடங்கள் தாமத மாக வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காலதாம தமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என்றனர். தாமதத் திற்கு மன்னித்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி கேட்டுள்ளார். அங்கு இருந்த காவல் உதவி ஆய் வாளர் ஒருவர், உங்களை அனுமதிக்க முடியாது. அனு மதித்தால் என் வேலையே போய்விடும் என்று கூறி யுள்ளார். காவல் துறையினரின் நிலைமைய உணர்ந்த மாணவி சோகத்துடன் திரும்பிச் சென்றார். இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், கோவை மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பை புறந்தள்ளி பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கியது. கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என அறிவித்திருந்தது. விடுமுறை என அரசு அறிவித்த நிலையில், தனியார் பள்ளிகள் இதனை மதிக்காமல் பள்ளி இயங்கும் என அறிவித்தது, பெற் றோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.